NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

             வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கில்  தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம்  ‘வெயிட்டேஜ்’ முறையை  பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ்  முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி  பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய  படிப்புகளின் பெற்ற  மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு  செய்யப்படுகின்றனர். 

       வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ்  ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட்  ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை  மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி  கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த  முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’  என்று வாதாடினார்.

                          மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி,  கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும்,  அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.  கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும்  வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர்.  குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில்  படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள்  அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே,  வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று  வாதாடினார்கள்.  இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பின்குறிப்பு - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்.




75 Comments:

  1. தகுதித் தேர்வு ஒருவரின் சொந்த பாடத்தின் முழு அறிவை சோதிக்கவேயில்லை.

    தகுதிகாண் மதிப்பெண் முறை தேர்வர்களில் முழு திறமையானவரை, முழு தகுதியானவரை, அதிக அனுபவமுள்ளவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் வண்ணம் இல்லை.

    (TET MARK 80% +
    UG MARK 5% +
    B.ED MARK 5% +
    UG & B.ED முடித்த பிறகு பெற்ற பணி அனுபவம் 5% +
    UG & B.ED பதிந்த வேலைவாய்ப்பக பதிவு மூப்பு 5%
    மொத்தம் 100%,) என முதல் அரசாணையாகவே எல்லா வகையினரின் திறமை, தகுதி, அனுபவம் யாவற்றையும் ஒருசேர அளந்து தகுதி மதிப்பெண்ணாக மாற்றி - நியமனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே...

    வயதானவர், இளையவர், திறமையானவர், அனுபவ அறிவுடையவர் என எல்லாம் உள்ளடக்கிய தகுதிகாண் மதிப்பெண் முறையை எவரும் மறுப்பதற்கில்லை.

    நீதிபதியே குற்றத்தை நேரில் கண்டாலும் அதை தீர்ப்பில் கொண்டு வர இயலாது. வாதத்திறம் மட்டுமே தீர்ப்பாய் மாறும்.

    ஆனால் அரசு நினைத்தால் எல்லாம் இயலும். இதே முறை அல்லது வேறு ஏதேனும் சிறந்த முறை கடைபிடிக்கவும் என்று நீதிபதி உத்தரவிட்ட போதே - அரசு பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்திருக்கலாம். அதையும் நம் தேர்வர்கள் எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள் என்றே - நீதிமன்றம் கூறிய முறையை அப்படியே அரசு அமல் செய்தது.

    பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அமல் செய்யாததால் அரசு உட்பட, அதிகாரிகள், தேர்வர்கள்,
    தேர்வர்களது குடும்பம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் என யாவரும் கடுமையாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு பலரது வாழ்வாதாரம். 43,000 தேர்வரில் பெரும்பாலானோர் நடுத்தரத்திற்கு கீழ் உள்ள குடும்பமே. அடுத்த நியமனம் பணிவாய்ப்பு மிக குறைவு. ஆதலால் கடுமையாக வாக்குவாதம் புரிகிறோம்.

    எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்... (பாரசீக உமர்கய்யாம் பாடல்)

    தீர்ப்புக்காக இலவு காத்த கிளியாய் 43,000 பேர்!

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டாரய்யா நாட்டாமை

      Delete
    2. ஐயா, போராட அழைக்கும் நண்பர்களே நீங்கள் அழைக்கும் போது,
      அதிக இடம் கேட்டு போராடுவோம் என்று கூறுகிறீர்கள். இது என்னவோ நியாயமாகத்தான் இருக்கு, ஆனா கூப்பிட்டு வைத்து
      போர்ட கையில குடுத்து TET ரத்து செய் அப்படின்னு தானப்பா போராட
      சொல்றீங்க. அனைவரையும் கூப்டுறீங்க அங்க பாத்தா ஒரு சாராருக்கு
      மட்டும் சப்போட் பன்னுறீங்க!!!. ம்ம்ம்,,,
      ஆரம்பம் என்னமோ நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங் சரியில்லயேப்பா!!!....!!!!??...???

      Delete
    3. Pls call me, I will clarify your doubt.

      Delete
  2. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி : 7598000141

    ReplyDelete
  3. தினம் ஒர் குறள்

    ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான் சாம் துயரம் தரும்

    கருத்து
    ஆராயாமல் கொள்ளும் நட்பு இறுதியில் சாவதர்க்கு காரணமான துன்பம் தரும்

    வாழ்க தமிழ்....
    நாளை மற்றொரு குரளுடன்
    உங்கள் அன்பு நண்பன்

    ReplyDelete
  4. 500 பக்கங்களில் அடக்கிவிட முடியுமா இந்த GO 71 ன் குறைகளை ??????????

    ReplyDelete
  5. லொல்லா
    இத நம்பி பார்த்த வேலய உட்டாச்சு
    ஊாருக்கும் பதில் சொல்ல முடியல
    என்னதான் சிரிச்சாலம் மனசில நிம்மதி இல்ல
    இதுக்கு பேசாம டெட் எழுதாம இருந்திருக்கலாம்
    அனா சும்மா சொல்லக்கூடாது ஜட்ஜ கூட இப்படி யோசிக்கமாட்டாரு
    நம்மாளுக தீர்ப்ப உட்றானுக பாரு
    அடங்கப்பா போதும்முடா
    சொம்பு ரொம்ம அடி வாங்கிடுச்சு

    ReplyDelete
  6. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி : 7598000141

    ReplyDelete
    Replies
    1. tamil padecha tha mathe pa illa ya , kata vara subject yadukuravainga thamilli yadupagala, athu tha nadakuthu,

      Delete
    2. science padechava yailla tamil la yadukura ga, panam erutha yaru vanu nalu yaintha subject vanunalu yadukala ga

      Delete
  7. நல்லாபீதியை கெளப்பராங்கய்யா

    ReplyDelete
  8. ஏம்பா தம்பி அந்த பொன்ன கைய புடிச்சு இழுத்தயாமே?!!!!!....

    ஜட்ஜ தீர்பு சொல்ல விட்ராதீங்கப்பா.....

    ReplyDelete
  9. தீர்வில்லா ஓரு தேர்வு.தவிக்கும் குடும்பம். என்று தணியும் இந்த tet ன் தாகம். கணத்த மனதுடன் உங்களில் ஒருவன்! !!!

    ReplyDelete
  10. Please remove the weightage mark system by ARGTA brte association new tamilnadu m,o madurai b,o villupuram dt 9443378533

    ReplyDelete
  11. வழக்கு என்று வந்துவிட்டால் குறைந்தது 3 மாதமாவது ஆகும். இது என்ன எதிர் கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் உள்ள பிரச்சினையா உடனடி விசாரணை பண்ணி தீர்ப்பு வழங்க.....

    ReplyDelete
  12. நிச்சயம் நீதி வெல்லத்தான் போகிறது..
    300 பக்க அறிக்கை தயாராக உள்ளதாம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நீதி வெல்லும் தோழரே வாழ்த்துக்கள் பல..... வெற்றி நமதே....

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Sir send me ur mail id..
      Contact me
      tamil.cute619@gmail.com

      Delete
    4. Entha neethinu puriumpadiyathan sollungalen

      Delete
    5. Vallvanukku pullum ayutham,300 pakkam enna 1000 pakkam vanthalum sari,important points venum, neethimanram go vil kurai irunthal athai sari ceyya arivuruthumay thavira go ippadi than irukka vendum ena nirpanthikathu

      Delete
    6. போலியான ஒரு வீடியோ வை தயாரித்து, அதை அரசுக்கு எதிராக செயல்படும் தொலைக்காட்சியில் வெளியிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் செயலில் மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

      போராட்டம் என்ற பெயரில் அரசை மிரட்ட நினைத்து மருந்து நாடகத்தை நடத்தியதற்காக மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

      தெளிவில்லாத எதிர்க்கட்சியினரை சென்று பார்த்து தேவையற்ற அறிக்கைகளை விடசெய்து அரசுக்கு கெட்டபெயர் பெயர் ஏற்படுத்த நினைத்த உங்கள் செயலில் அக மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

      Delete
    7. No, no, our present govt. Won do like that because we have mental coureged cm so don't worry.

      Delete
    8. No, no, our present govt. Won do like that because we have mental coureged cm so don't worry.

      Delete
  13. selectet teachers dont worry

    ReplyDelete
  14. சரவணன் நண்பரே புதன் அன்று இறுதி தீர்ப்பு இல்லை...

    எழுத்து வழியாக அறிக்கை சமர்பிக்க புதன்கிழமையே இறுதி நாளாம் என மூத்த வழக்கறிஞர் ஆனந்தி அவர்கள் தற்போது சொன்னார்கள்...

    300 பக்க அறிக்கை ரெடி மேலும் தயார் பன்னுகிறோம்..

    விரைவில் ஜி.ஓ 71 ஒழியப்போகிறது...

    ReplyDelete
    Replies
    1. ராசலிங்கண்ணே வெற்றி வெற்றி என்று முழங்குங்கள்,அதே நேரம் தோல்வி வந்தால் என்ன செய்வது? நல்ல வழியை காட்டுங்கள்...

      Delete
    2. மா மாற ஒதாமாறாத, மாவெதலா உேரா, மாறாெத எலா மேனா, ெபாைமெகா தைரட சலைடஅளலா, அ பககளாக ஆவைர, பணதா சேதாஷைத வாடைக வாகலா, ஆனா ைல வாக யா, பைகவபைகைய ட நப பைகேய ஆபதான, ய  எெகா, யைனேய ெசகலா. கஞ ைவர அவக வக ஏப, மாற சய க நபகேள..... ெபாக.

      Delete
    3. ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி அரசாணை 71

      காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனு...
      http://tnteachersnews.blogspot.in/2014/09/71_19.html?m=1

      Delete
    4. mr.rajalingam sir neenka evlo mak tet la ena major sir?

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. Rajalingam vetri petray thiruvom

      Delete
    7. Elaikalukka oru go panakkaranukku oru go velieda mudiyathu ,old syllabus ikku our go new syllabus ikku oru go velieda mudiyathu, kalathirkku erpa padathittam thayarikka padukirathu

      Delete
  15. TET - பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
    TET – வழக்கு
    பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
              இன்று காலை (16.09.2014) சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. 
    இன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

            எனவே வரும் வெள்ளிக்கு பிறகு அடுத்த வார இறுதியிலோ அல்லது 10 நாட்களுக்கு உள்ளாகவோ நீதிபதிகள் தனது தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். தற்போது நடைபெற்றுள்ள கலந்தாய்வு அரசாணை 71 ன் படி நடைபெற்றுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இறுதி பட்டியலில் தெளிவாக கூறியுள்ளதால் தேர்வர்கள் நீதிமன்ற தீர்ப்பை மிக ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சென்னை நீதிமற்த்திலிருந்து – பாடசாலை
    **********************
    இன்று 19/09/2014
    TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
     வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று  வாதாடினார்கள்.  இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    பின்குறிப்பு - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்
    -பாடசாலை
    ஆசிரிய இரு வேறு செய்திகளை வெளியிட்டு தேர்வானவர்களை குழப்புவது தான் தங்கள் நடுநிலைத்தன்மையோ? எங்களுடைய பாவம் யாரையும் சும்மா விடாது. நண்பர்களே கவலை வேண்டாம். வெற்றி நமதே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நான் மகான் அல்ல அவர்களே ....
      இரு வேறான கருத்துக்கள் என்றாலும் தற்போதைய விஷயத்தை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .... பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு நடுவில் கிடைப்பது தானே உண்மை .... நன்றி ....

      Delete
    2. வணக்கம் வாசகரே,

      வெள்ளிக்கிழமைக்குள் எழுத்து பூர்வமான வாதத்தை வழங்க வேண்டும் என கூறியதாக வழக்கு தொடுத்தவர்கள் சார்ந்த வழக்கறிஞர்கள் தரப்பில் கூறிய கருத்தையே முன்னர் பதிவேற்றினோம். தற்போது அதே தினத்தில் வாதம் செய்த மற்றொரு வழக்கறிஞர் தரப்பு - வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்ய கால அவகாசம் உண்டு என கூறியதை அறிந்து அவற்றையும் பதிவு செய்துள்ளோம்.

      கடந்த இரு தினங்களுக்கு முன் டெட் சார்ந்த வழக்கு ஏதும் மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை என விசாரித்து அறிந்து அது சார்ந்த செய்தியை பாடசாலை தவிர்த்துள்ளதை இங்கு நினைவு கூற விரும்புகிறோம்.

      நன்றி!

      Delete
    3. நீங்கள் மட்டுமே உண்மை சொல்லுவீர்கள். அதில் மட்டுமே நம்பிக்கை
      வைக்கின்றோம்

      Delete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. நீங்க நல்லா இருங்க.....

      Delete
  17. 16/09/2014 அன்று நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
    *********************
    ராஜலிங்கம் பாடசாலையில் வெளியிட்ட தகவல்:

    சரவணன் நண்பரே புதன் அன்று இறுதி தீர்ப்பு இல்லை...

    எழுத்து வழியாக அறிக்கை சமர்பிக்க புதன்கிழமையே இறுதி நாளாம் என மூத்த வழக்கறிஞர் ஆனந்தி அவர்கள் தற்போது சொன்னார்கள்...

    300 பக்க அறிக்கை ரெடி மேலும் தயார் பன்னுகிறோம்..

    விரைவில் ஜி.ஓ 71 ஒழியப்போகிறது..****************
    யார் சொல்வது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை நமக்கு சொல்லவே நீதியரசர்கள் உள்ளனர் ... காத்திருப்பது தான் தற்போது நாம் செய்ய வேண்டியது .... நன்றி ...

      Delete
  18. 2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam

    ReplyDelete
    Replies
    1. நீங்க இனி என்ன செய்யலாமுன்னு உத்தேசம்?

      Delete
  19. அன்புத் தம்பிகளா! எது நீதியோ அது நிச்சயம் வெல்லும்.சந்தேகம் இல்லாமல் நம்புங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாா்வையில் எது நீதி என சொல்லுங்கள் பாா்ப்போம்.

      Delete
    2. அன்பு நண்பரே தெளிவாகச் சொல்லவா?,
      ஆரம்பத்திலேயேபோராடுபவர்கள் கூடுதல் இடம் கேட்டு போராடியிருக்க வேண்டும்,பாஸ் பண்ணிய அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி போராடி இருக்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு சம்பளம் வழங்கும் ஆசிரியர்களை அரசே நியமித்து கூடுதல் இடம் கிடைக்க
      வழி ஏற்பதடுத்துவதோடு அந்த ஆசிரியர்களை அரசு ஆசிரியர்கள் போலவே இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும், அரசு பள்ளி. தனியார்பள்ளி என்று பிரித்துபார்க்காமல் அனைத்து ஆசிரியர்களையும் அரசின் கைவசமே வைத்துக்கொள்ள வேண்டும், இத்தகய செயல்பாடுகள் நடந்தால் ஒழிய அனைத்து பிரச்சினைகளுக்கும், தீர்வு அமையாது.

      Delete
    3. அன்பு நண்பர் தனேஸ் குமார் உங்கள் பார்வையில் எது நீதி என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

      Delete
    4. நோக்கம் தவறாக கொண்டோர் பக்கம் நிச்சயம் நீதி நிற்காது,
      இந்த உண்மை விரைவில் புரியும்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. போராட்டம் நடத்துவோர் ஆசிரியர்கள் மட்டும்தான் என்றால்,
      மேற்சொன்ன காரியங்களை நிறைவேற்றி தருமாறும், ஆசிரயர்களின்
      சூழ்நிலையை தெளிவாக விளக்கி முதல்வரின் பார்வைக்கு
      சமர்பித்திருந்தால் நிச்சயம் முதல்வர் அவர்கள் நடவடிக்கை
      மேற்கொண்டிருப்பார், அதை தவிர்த்து அரசின் நடவடிக்கைகளை
      தடுக்கும் நோக்கில் முடக்கும் நோக்கில் செயல்படுவது. நிச்சயமாக
      தவறான செயலாகும், அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்
      தானே நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு. ஆரம்பத்திலேயே போராட்டம் நடத்தியதால் இதில் நிச்சயம் அரசியல்தான் உள்ளது,
      என்பது நன்றாக புலப்படுகிறது.

      Delete
  20. Tet pass+ seniority all problems solved

    ReplyDelete

  21. Mr.Rajalingam sir, what is your tet mark and which major you are?please send your register number sir

    ReplyDelete
  22. Rajalingam d.ted .I think he is a paper I

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Sariyana netthi adi rajalingam

      Delete
    2. ராஜலிங்கம் சார். நீங்கள் உண்மையிலேயே ஆசிரியர் தானா?
      என்கின்ற சந்தேகம் எழுபவர்களுக்கு உண்மையான அடையாளத்தை
      காட்டுவதில் என்ன தயக்கம்?. இவ்வளது ஆட்களையும் தயாரித்து
      போராட்டம் நடத்தும் நீங்கள் தைரியமாக காட்டிவிடுங்கள்..
      அப்பொழுதாவது புரியட்டும், இல்லாவிட்டால் பாடசாலை போன்ற
      பொது இடத்தில், ராஜலிங்கம் போலியானவர் தானோ என்ற ஐயத்தை
      ஏற்படுத்துகிறது....

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. ஏனுங்க பாடசாைலை நீங்க அப்பே நடுநிலையில் கிடையாதா?,,
      நீங்கள் போராட்டம் நடத்துபவர்களுக்கு சாதகமா?,,!!!!!!!!...?.
      ஜயா இது தெரியாமல்தான் இத்தனை நாளா வாசகர்களா இருக்கமா?????????!!!!!!.... எதற்காக என்னுடைய கமாண்டை
      அழித்தீர்கள்? ,,, அதே நேரம் போராட்டம் நடத்த துாண்டுபவர்களை
      விட்டு விட்டீர்கள்?

      Delete
    5. போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு என்றால் வாசகர் திரு. ராஜலிங்கம் அவர்களின் கமெண்ட் நீக்கப்பட்டிருக்காது. ஆனால் அவரின் கமெண்ட்டும் நீக்கப்பட்டிருக்கிறது என்பதை மேலே காணுங்கள். வாசகர்கள் வழங்கும் கமெண்ட் தனிப்பட்ட நபரை தாக்குதல் செய்வது போலோ அல்லது தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலோ, நீக்கப்படும்.

      நன்றி!

      Delete
  24. நன்பரே தகுதி மதிப்பெண் என்றால் என்ன தெரியூமா?
    பன்னிரெட்டாம் வகுப்பில் சுமார் 50க்கு மேற்பட்ட குரூப் உள்ளது. அனைவரையூம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க விதிமுறை உள்ளதா?
    அல்லது அனைவரையூம் பொறியியல் படிப்பில் சேர்க்க விதிமுறை உள்ளதா?

    அவ்வாறு இருந்தால் நாமும் அரசாணை 71ஜ ஆதரிக்கலாம். அவன் அவன் பன்னிரென்டாம் வகுப்பில் எடுக்கும் குரூப் ஏற்றவாறு அவர்கள் கல்லூரியில் சேருகின்றனர்.

    கல்லூரியல் பலதரப்பட்ட கல்லூரிகள் உள்ளது (தன்னாட்சிஇ பல வகை பல்கலைக்கழகம்இ திறந்த வெளிஇ தொலைதூர பல்கலைக்கழகம் என்று பலவாறு உள்ளது) ஒவ்வொருவரும் அவர் ஊருக்கு அருகில் அவனுடைய பொருளாதார தகுதிக்கு ஏற்ப அரசு கல்லூரியில்இ தனியார் கல்லூரியிலும்இ திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றான். கல்லூரி கல்வி தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இருந்தால் இந்த அரசாணை ஏற்றுக்கொள்வோம்.

    அந்த சமயத்தில் மருத்துவம் பொறியியில் போன்ற படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணை அனைவருக்கு ஒரே வெயிட்டேஜ் என்று அறிவித்திருப்பது ஏற்கெனவே படித்த அனைவரையூம் கதிகலங்க வைத்து விட்டது.

    ஒன்று வெயிட்டேஜ் முறை நீக்கம் செய்து. 2012ம் டெட் தேர்வூ முறைப்படி எப்படி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனரே அதே மாதிரி 2013ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அரசு அறிவித்த 5 சதவீதம் உண்மையாக வரவேற்கத்தக்கது.

    அல்லது கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை தரவேண்டும் மருத்துவம் பொறியில் கல்லூரிக்கு சேர்வதற்கு அந்த சமயத்தில் எவ்வாறு சலுகை வழங்கப்பட்டதோ. அந்த கல்வியாண்டியல் தனது பள்ளிபடிப்பு கல்லூரி படிப்பை படித்த முடித்தவருக்கு கிராமபுற சலுகை கண்டிப்பாக தரவேண்டும்.

    சட்டத்துறையில் - புதியவர்களை நீதிபதியாக தேர்தெடுக்க கூடாது என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  25. ராஜலிங்கம் சார். நீங்கள் உண்மையிலேயே ஆசிரியர் தானா?
    என்கின்ற சந்தேகம் எழுபவர்களுக்கு உண்மையான அடையாளத்தை
    காட்டுவதில் என்ன தயக்கம்?. இவ்வளது ஆட்களையும் தயாரித்து
    போராட்டம் நடத்தும் நீங்கள் தைரியமாக காட்டிவிடுங்கள்..
    அப்பொழுதாவது புரியட்டும், இல்லாவிட்டால் பாடசாலை போன்ற
    பொது இடத்தில், ராஜலிங்கம் போலியானவர் தானோ என்ற ஐயத்தை
    ஏற்படுத்துகிறது....

    ReplyDelete
  26. 2013 tet moral
    First
    1.above 90 result
    2. Above 82_89 result vanthathu

    Second

    1.cv 90 above
    2.cv 82_89 ku cv

    Selection list

    1seclection list ippo vanthullathu
    2.Reselection list varum en varathu

    Similarly

    Councelling

    1. Ippo nadanthullathu
    2.Recouncelling nadakum

    En nadakathu

    kandipaga Reselection listum varum
    Atheypol Recouncellingum nadakum

    Ithu than 2013 tet moral

    ReplyDelete
  27. மாலை வணக்கம் நண்பர்களே

    நீதி வெல்ல வேண்டும்
    நீதி மட்டுமே வெல்ல வேண்டும்
    போராடுவோம் போராட்டம் மட்டுமே வெற்றியை கொண்டு வரும்.
    நாளை நமதே
    இந்த நாளும் நமதே
    தாய் வழி வந்த பிள்ளைகள்
    எல்லாம் ஓர் வழி நின்றால்
    நாளை நமதே

    ReplyDelete
  28. TET PASS SEITHAVARGALUKU ORU KELVI: 1.ITHANAI NANBARGAL PASS SEITHIRUKA ETHARKU ENNORU TET EXAM 2.THAGUTHI PETRAVARGAL THAAN AASIRIYARA NIYAMIKAVENDUM ENDRALL ITHANAI NANBARGAL IRUKIROAMAE 3.VARUDAVARUDAM THERVU VAIPATHARKAGAVAA PASS SEITHOAM 4.MARK ATHIGAMAAGA VAANGIYAVARGALAI SELECT SEIYA VENDUM YENRALL ETHARKU WEIGHTAGE 5.MARK ATHIGAM PETRAVARGALKU THAAN VELAI YENRAAL APPURAM THERCHIPETRATHAN
    ARTHAM YENNA? 6.MARK ADIPADIYIL PANINIYAMANAM YENRAAL IVARGAL YEAN ITHUTHAAN THUGUTHI YENRU 82 MATHIPENNAI NIRNAYIKRARGAL . 7.APPADIYUM THAGUTHI PETRU VELAI ILLAI YENRAAL APPURAM THAGUTHI THEARVU ETHARKU? 8.ITHARKU PESAMAAL SENIORITY ADIPADAIYIL PANINIYAMAM SEITHU PIN AVARGALUKU THGUTHI THEARVU VAITHU 2 MURAI VAAIPU KODUKALAMAE. 9.YEAN ITHANAI PERIDAM ORU SEITHIYAI THERIVITHU YETHO PASS SEITHAAL ANAIVARUKUM VELAI YENPATHU MAARIYUM PIN PASS SEITHAUDAN YENGALAKU IVALAVU THAAN THVAI YEANPATHALL AVARGALAI OLITHUKATTA NAYAVANJAGAMAAGA WEIGHTAGE MURAIYAI KONDUVANTHU KOLAPUVOAM ENDRU TET EXAM VAITHAVARGAL SOLKIRARGAL. 10.TET EXAMIL PASS SEITHAVARGALUKU NEXT POSTINGIL PREFERENCE KODUKAVENDUM. YEAN YEANRAAL SENIORITYUM KIDAYAATHU TET MARK ADIPADIYULUM PANINIYAMANAM(ORU VELAI THEERPU MAARIVANTHAAL)KIDAYAATHU ENPATHU PASS SEITHA ANNAIVARAIYUM PAATHIKUM. ITHIL INNAMUM GOVERNMENTAE THELIVAAGA ILLAI ENPATHU MIGAVUM SINDIKA VENDIYA VISAYAM. ORU VELAI THEERPU MAARI VANTHAAL MEETHI ULLAVARGALAI NEXT POSTINGIL MUNNIRUMAI KODUKAVENDUM ILLAYAEL SELECT AANAVARGALAITHAVIRA MATRAVARGAL YELLORUM YEMATRAPATTATHAAI ARTHAM. THEERPU NIYAMAGA AMAIYA IRAVANAI VENDIKOLIKIRAEN. M.VIJAYAKUMAR.KARUR

    ReplyDelete
  29. Old syllabus new syllabus ikku tani tani yaga go kondu vara mudiyatu, judgement will favour to government, magistrate asked private lawyer 60 marks given for tet exam ,so how can u say it is wrong method, neethimanram go vil kurai irunthal athai nevarthi seyya arivuruthumay thavira,G o ippadi than irukka vendum ena nirpanthikathu, pathikka padura ovvaruvarukkakavum go velieda mudiyathu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive