NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு

             ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்து இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் வெயிட்டேஜ் முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 
              பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்தது. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற கோவையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார்.

            சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் கலைநேசன் என்பவரும், இவருடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் பணி வாங்கி தருகிறேன் என பலரிடம் யி80 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மாற்று பெயரில் விடுதி எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இளங்கோவனை கண்டுபிடித்தால் மேலும் பல இடைத்தரகர்களின் பெயர் வெளிவரும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




6 Comments:

  1. These Culprits immediate arrest and put in to andaman jail.

    ReplyDelete
  2. ஏம்பா tnpsc உங்களுக்கு போா் அடிச்சுடுச்சா ? இந்த பக்கம் வந்துட்டீங்க.

    ReplyDelete
  3. Puthusu puthusua problems kandupidikarangapa

    ReplyDelete
  4. Ithu pola aalungala pidichu jail la podunga pa

    ReplyDelete
  5. SEEKIRAM TET-KU ORU SOLUTION SOLLUNGA TN.GOVT

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive