NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்- மாலைமுரசு

           சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..

        அ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து என்ன காரணத்தாலோ, கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள், சமச்சீர் கல்வியில் தொடங்கி, ஆசிரியர்கள்நியமனம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம் அவ்வப்போது சுட்டிக் காட்டியும் கூட அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்குரிய மதிப்பு கொடுக்க மறுக்கின்றனர்.

        தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் பத்து நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிக்கின்றார்கள். நேற்றையதினம் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளி வந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல்வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக்கூறப்பட்டது.ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லுhரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது.

தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை.அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லுhரித் தேர்விலும், பயிற்சிக் கல்லுhரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்."வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நுhற்றுக்கு மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில்கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.




39 Comments:

  1. கண் கெட்ட பிறகு "சூரிய" நமஸ்காரம்??

    ReplyDelete
    Replies
    1. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      வாழ்க வளமுடன்.

      Delete
    2. இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளீர்களா???????

      Delete
    3. .

      ஆறு முறை முதல்வர் இ௫ந்த கலைஞர் அவர்களின் இந்த அறிக்கைக்கும்

      இந்த செய்தியை வெளியிட்ட
      பாடசலைக்கும்

      பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
      பின்
      தர்மமே வெல்லுமா ?

      .

      Delete
    4. தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதரிகளே இங்கு சென்னை யில் இடைநிலை ஆசிரியர் சார்பில் 20 நபர் மட்டும் தான் உள்ளனர் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலும் மகளிர் என்பதை அனைவரும் அறிவர்
      உங்களின் சூழ்நிலைகளையும் நாங்கள் நன்கு அறிவோம்,தங்களால் நாளை சென்னை வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது சிறு பங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்,
      எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு "கூடுதல் பணியிடங்கள் " வேண்டுதல் சார்பாக உங்கள் மேலான உணர்வையும், உணரும் மன வலியையும் வெளிப்படுத்துங்கள்,
      உங்களின் ககுரலுக்கு வலிமை அதிகம் உணருங்கள்
      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb.tb@nic.in
      schsec@tn.gov.in
      mlajolarpet@tn.gov.in

      எதிர்பார்ப்புடன்,

      சத்தியமூர்த்தி.
      சத்யஜித்,

      Delete
  2. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. இதை சுயநலம் என்று சொல்பவர்கள்தான் உண்மையில் சுயநலவாதிகள்..
      வாழ்த்துக்கள்!

      Delete
  3. .அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Unmai anitha mam sure ah amma oru nalla mudivu eduppanga....

      Delete
  4. dear sir/madem welfare dept sclah paththi konjam sollunga plz.....salem tharmapuri krishnakiri and thindukal uthagai entha Dt la welfare scools irukka? entha DT sammantha pattavanga thagaval sollunga frnds

    ReplyDelete
    Replies
    1. Dharmapurila niraiya schools iruku..dindukal konjam kammi..salem cuddalore vilupuram niraiya iruku friend ..but dharmapuri & krishnagirila GTR(government tribal residential school) schoolsnu irukum...vaazhthukkal

      Delete
    2. suruli vel sir any news abt ADWS list sir.pls reply me sir.i am waiting for that list...

      Delete
  5. Muyaindral mudathathu intha ualakel ethum illa. Poradum anathu uillankalukum enathu manamarintha valthukal.

    ReplyDelete
  6. Hi basha sir. Counsiling mudingada. Antha area la ungaloda aasiriyar paniya thodanga poranga

    ReplyDelete
  7. thank you dear vasanth grija

    ReplyDelete
  8. என்றைக்கும் ஆசிரியர்களின் காவல் தெய்வம் கலைஞர் என்பதை நிரூபித்துவிட்டார் அவரது அறிக்கை மூலம். மிக்க நன்றி கலைஞரே. உங்களுக்கு கடந்த தேர்தலில் வாக்களிக்காததை எண்ணி தற்போது வருத்தபடுகிறோம். உங்கள் ஆட்சியில் கல்வித்துறைச் செயல்பாட்டை எண்ணிப் பெருமைப்படுகிறோம். நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி உயிருக்குப் போராடும் ஆசிரியர்களைக் கண்டும் காணாமல் இருந்திருப்பீர்களா! ஓடோடி வந்து தோழர்களின் துயர் துடைத்திருப்பீர்கள் என்பது திண்ணம். உங்கள் அறிக்கைக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறி தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறோம் முத்தமிழறிஞரே.

    ReplyDelete
    Replies
    1. He is the only person to know the difficulties of teachers and government employees. He lives long. He will be the next C.M.

      Delete
  9. pathikkapatta asiriyarkalin niyayamana porattathirkku atharavaga kural kodutha munnal C.M avarkalukku kodana kodi nanrikal.

    ReplyDelete
    Replies
    1. கலைஞருக்கு நன்றி சொல்வோம்

      Delete
  10. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து , தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் தகுதி(TET) தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையிலோ வேலை வழங்கினால் யாருக்கும் பிரச்சனை வராது இதை ஆசிரியர்கள் புரிந்து கொண்டால் சரி.

    ReplyDelete
  11. என்றைக்கும் ஆசிரியர்களின் காவல் தெய்வம் கலைஞர் என்பதை நிரூபித்துவிட்டார் அவரது அறிக்கை மூலம். மிக்க நன்றி கலைஞரே. உங்களுக்கு கடந்த தேர்தலில் வாக்களிக்காததை எண்ணி தற்போது வருத்தபடுகிறோம். உங்கள் ஆட்சியில் கல்வித்துறைச் செயல்பாட்டை எண்ணிப் பெருமைப்படுகிறோம். நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி உயிருக்குப் போராடும் ஆசிரியர்களைக் கண்டும் காணாமல் இருந்திருப்பீர்களா! ஓடோடி வந்து தோழர்களின் துயர் துடைத்திருப்பீர்கள் என்பது திண்ணம். உங்கள் அறிக்கைக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறி தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறோம் முத்தமிழறிஞரே.

    ReplyDelete
  12. எத்தனை பேர் என்மீது குற்றச்சாட்டு வைத்தாலும் போராட்டத்திலிருந்து நான் பின்வாங்குவதில்லை.....

    நண்பர்களே இனிவரும் நாள்கள் நமக்காக தான் சென்னைக்கு ஓடோடி வாருங்கள்....

    அனைத்து முக்கிய பிரமுகர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர் விரைவில் முதல்வர் அவர்கள் பணியிடம் அதிகரிப்பையும் எங்களுக்கான மாற்று வழியையும் வெளியிடுவார்கள் என தெரிகிறது....

    பாதிக்கப்பட்ட அனைவரும் ஒருநாளாவது எங்களோடு பங்கேற்று ஆதரவுக்கரம் தாருங்கள்....
    நாளை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ அலுவலகம் வாருங்கள்.....

    வெற்றி நமதே....நாளை நமதே

    ReplyDelete

  13. சரவணன்9/02/2014 6:50 pm
    ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
    This for humble reqest to all teachers.

    ReplyDelete
  14. உங்களின் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  15. 82மதிப்பெண் எடுத்தவருக்கு வேலை கிடைக்காவிட்டால் அடுத்த தேர்வில் அவர் 100மதிப்பெண் பெற்றால் அவருக்கு வேலை கிடைக்கும்.ஆனால் 118மதிப்பெண் எடுத்தும் வேலை கிடைக்காதவருக்கு இனி எப்படி வேலை கிடைக்கும், சிந்தியுங்கள்!
    இத்தனை நாள் அனைவரும் பாடசாலை தளத்தில் Comment மூலம் சண்டை போட்டுக்கொண்டனர் ஆனால் அன்று 82 83 மதிப்பெண் பெற்றவர்கள் வேலையை வாங்கி கொண்டு வாயை மூடி இருக்கிறார்கள்..நீங்கள் சேர்த்து கொண்டிருப்பது பாவங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  16. இனிமேல் IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு, அவர்கள் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களும்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 12ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வரை மீண்டும் மீண்டும் எழுதி எழுதி எழுதி எழுதி................... என்று அரசுஒரு கொள்கை முடிவை எடுத்தால் எப்படி இருக்கும். நீதிமன்றத்திற்கே அவர்கள் சென்றால் கூட........... . நீதிமன்றம்தான் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது அல்லவா??????? அப்புறம் என்ன செய்வார்கள் இந்த வெயிட்டேஜ்- ஐ யாரையும் கலந்தாலோசிக்காமல் கொண்டு வந்து எங்கள் வயிற்றில் அடித்த அந்த IASகள். அதிகாரிகளே எங்களின் மனநிலையில் நீங்கள் இருந்து பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் எங்கள் உழைப்பின் வலியும், 20ஆண்டு காத்திருப்பின் பரிதவிப்பும்... எங்கள் கண்ணீருக்கும் ஒரு நாள் விடிவு பிறக்கும். எங்கள் உயிரை இழந்தேனும். எங்கள் பிணத்தின் மீதுதான் அப்படிப்பட்ட தீர்வு கிடைக்குமா? நடைபிணமாய் நாங்கள் வாழ்வதைவிட........ ????? இப்படிக்கு மிகஅதிக மதிப்பெண் பெற்றும் அரசிடம் மடிப்பிச்சைக்கேட்டு தெருத்தெருவாய் பஸ்சுக்கு கூட பணமின்றி கால்நடையாய் கண்ணீருடன் சுற்றிவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்

    ReplyDelete
  17. வெற்றியும் நமதே! நாளையும் நமதே!!

    ReplyDelete
  18. பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கண்ணீரை தமிழக அரசு விரைவில் துடைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. இதுவரை கண்ணீரைத் துடைத்திட துணி கிடைக்கவில்லையா?

      Delete
    2. கின்னடலு

      Delete
  19. வரும் செப்டம்பர்5வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினம்.ஆசிரியர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஏன் தமிழக மக்களின் ஒட்டு மொத்த பார்வையும் கூட எங்கள் பக்கம் திரும்பும். பாதிக்கப்பட்ட எங்களுக்குதான் அதன் வலித் தெரியும். எத்தனை நாட்கள் தான் நாங்களும் வலியோடு வாழ்வது?

    ReplyDelete
  20. Thannambikkai izhappadhum... uierai izhappadhum... irandum ondrudhan... namellam parandha ulagil pattampoochigalai parandhu thiriya manam vaippom... velai enbadhu arasu velai mattume alla.. vazha ninaippavanukku vaippugal kotti kidakkindrana... thedal... thedal... thedal... thedal ulla varaidhan vazhkkai rusikkum.. so.. manadhai thalara vidamal ungal payanatthai thodarungal nanbargale.. all the best.

    ReplyDelete
    Replies
    1. Munnal c.m enna seidharendru aasiriyarai pani purindhu kondirukkum ungal nanbargalidam kelungal... oru asiriyaraium... oru office attenderaium ore tharasil nirutthi sambalam vazhangiyavardhan munnal c.m kalaingnar avargal...

      Delete
    2. naveena mam really ur encouraging words anaithu asiriyarkalaium thannambikkai adaiya seiyum mam.vaalthukkal mam.

      Delete
    3. தோழியே! தேடல் தேடல் என்று ஓடி ஓடித்தான் 15ஆண்டுகள்தான் ஓடினவே ஒழிய, நாங்கள் இனியும் ஓடிட முடியாதவர்களாய் முயன்று காலை 7.45மணி முதல் இரவு 9.30 மணி வரை பணி முடித்து வீட்டிற்கு வந்து உண்டு முடித்தவுடன் புத்தகத்தை கையிலேத்தூக்கி, இரவு 11மணி முதல் காலை 3.30மணி வரை படிப்பு படிப்பு என்று உடல் அசதியையும் புறந்தள்ளி, எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் ஒன்றையே கருத்தாக்கி படித்து ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் 3மணி நேரம் கூட தூங்காமல் படித்து., 117 மதிப்பெண் எடுத்தபோதும், "தம்பி நீ 20 வருசத்துக்கு முன்னாடி படிச்ச+2ல மார்க் குறைவா எடுத்ததுனால உனக்கு வேலை இல்லை. இப்போ +2படிக்கிற பிள்ளைங்களுக்கு தேர்வுல கொஸ்டின் பேப்பர் படிச்சு பார்க்க கூடுதல் நேரம், இணையதள வசதி, சமச்சீர் கல்வி போன்ற திட்டங்கள கொண்டு வந்து அதன் மூலமா அவங்கள அதிக மார்க் எடுக்க வைத்து இனி வரும் காலங்கள்ல அவங்களுக்குதான் வேலை"அப்படினா எப்படித்தாங்கி கொள்ள முடியும்? 117 மார்க் வெளியே. 82மார்க் உள்ளே. போராடினோம் போராடினோம் நீதிமன்றம் வரை போராடினோம். ஆனால் எங்கள் தரப்பு நியாயத்தை காது கொடுத்து கேட்கவே யாருக்கும் விருப்பம் இல்லை. எங்களுக்கு கிடைக்காத நீதி எங்கள் மூலம் மற்றவர்கள் தான் அனுபவிக்கட்டுமே. அதுவே எங்களுக்கு பெரு மகிழ்வு. நன்றி தோழி.

      Delete
  21. அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும்...

    ReplyDelete
  22. T.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?

    ReplyDelete
  23. 5% இட ஒதுக்கீடு என்பது ஒரு அரசியல்
    தந்திரமே ஆகும். இட ஒதுக்கீட்டின் மூலம் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற எங்களின் வயிற்றில் அடித்த தாயே நீர் வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive