NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET போராட்டம் - கேள்வியும் பதிலும்?

TET போராட்டம் - கேள்வியும் பதிலும்?

                    டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து ஒரு சாரார் போராடுகின்றனர். நடந்து முடிந்த கலந்தாய்வில் பணியில் சேர இருக்கும் இடத்தை தேர்வு செய்தாலும், பணியில் சேர முடியுமா? முடியாதா? என்ற சோகத்தில் ஒரு சாரார் இருக்கின்றனர். 


           இதனால் இரு சாராரும் கமெண்ட்களில் தரக்குறைவாக சண்டையிட்டுக்கொள்கின்றனர். பாடசாலை என்றுமே தரக்குறைவான கமெண்ட்களை அனுமதிக்காது. ஆகையால் இரு சாராருக்கும் ஒரு புரிதலை, ஒற்றுமையை ஏற்படுத்த பாடசாலை விரும்புகிறது. அதனால் தான் இக்கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் போராட்டத்திற்கு எதிரானவர்கள் தங்கள் சுளீர் கேள்விகளை நாகரீகமான வார்த்தைகளில் கேட்கலாம். அவை அனைத்திற்கும் போராட்டக்குழுவிற்கு தலைமை தாங்கி இருக்கும் தேர்வர்கள் - வழங்கும் பதில்களை, இன்று இரவு பதிவிடுகிறோம். தங்கள் கேள்விகளை கமெண்ட் பாக்சில் பதிவிடவும். தங்கள் கேள்விகளும், அதற்கு உரிய பதில்களும் இன்று மாலை தான் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றப்படும். தங்கள் உண்மையான பெயர், மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களுடன் சேர்த்து தங்கள் கேள்விகளை தமிழில் கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாதிரி கேள்விகள்-


1). குமார், திருநெல்வேலி மாவட்டம் - டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து கடந்த ஒரு வருடமாக ஏன் போராடவில்லை. இப்போது மட்டும் ஏன் போராட்டம்? போராடுபவர்களின் பெயர்கள் பட்டியலில் வரவில்லை என்பதால் தானே?
பதில் - இது தவறான கருத்து. 2012 ல் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இதே சென்னையில் எங்களில் பலர் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2013 டெட் தேர்வில் ஜனவரி 20 - 23 ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு 2013 டெட் தேர்வுக்கு இடஒதுக்கீடு வழங்ப்பட்டவுடன் 2012 ல் நடந்த டெட் தேர்வுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் தற்போது தான் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடுகிறோம் என்பது தவறு. கடந்த ஒரு வருடமாகவே இதற்காக போராடியுள்ளோம்.திரு. பிரபாகரன் தொடர்ந்த வழக்கு எண் 707 மற்றும் திருமதி. சுமதி தொடர்ந்த வழக்கு எண் 708 ஆகிய வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு தற்போது டி.ஆர்.பியால் வெளியிடப்பட்ட  தற்காலிக பட்டியல் கட்டுப்பட்டது என டி.ஆர்.பி. வெளியிட்ட தற்காலிக பட்டியலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

2).  சசி, தேனி மாவட்டம் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்றால் தங்கள் குழுவில் இருக்கும் 90 மதிப்பெண்கள் எடுத்த பலருக்கும் பணி கிடைக்காமல் போகலாமே? அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் - இதனால் டெட்டில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் கிடைத்து எங்களில் பலருக்கு பணி கிடைக்காவிட்டாலும் இதற்காக வருந்த மாட்டோம். எதிர்கால தலைமுறைக்கு இதனால் நிச்சயம் பயன் உண்டு.  மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயன் உண்டு என நிம்மதி அடைவோம்.

3) ரவி, திருவள்ளுர் மாவட்டம் - நடந்து முடிந்த கலந்தாய்வில், பங்கேற்றவர்களின் பணி ஆணையை பறித்து, தங்களுக்கு பணி ஆணையை வழங்க கோருவது நியாயம் தானா?
பதில் - ஏறத்தாழ 8000 பேர் முன்னமே ஜனவரியில் சரிபார்ப்பு முடித்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் 3000 தேர்வர்கள் மட்டுமே. எனவே மற்றவர்களின் பணி ஆணையை பறித்து எங்களுக்கு பணி வழங்க கோரவில்லை. டெட் வெயிட்டேஜ் முறையால் இப்போதும், இனி வரும் தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என தான் போராடுகிறோம்.

4) விமல் மணி, திருவண்ணாமலை மாவட்டம் - இது வரை பல போட்டித் தேர்வு எழுதி எதிலுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - வேறு பணிக்கு நாங்கள் எப்போதும் போகவில்லை. ஆசிரியர் பணி என்பது மட்டுமே எங்கள் கனவு, அதுவே எங்கள் லட்சியம். அதில் மட்டுமே நாங்கள் சாதிக்கவேண்டும் என கருதி அதற்காகவே உழைக்கிறோம்.

5) படிக்கவேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - இது தவறு. சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுத்தேர்வில் மொத்த மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்களை விட, தற்பாது இருப்பவர்களின் மொத்த சராசரி மதிப்பணெ் அதிகமாகியுள்ளது - என்பதை  மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

6) உங்களுக்குள் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட பணி அனுபவம் இருக்கும்போது டெட் தேர்வில் 145 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றிருக்கலாமே? ஏன் பெறவில்லை?
பதில் - தற்போது உள்ள இளையே டெட் தேர்வர்கள் உட்பட எவருமே 145 மதிப்பெண்கள் பெற வில்லை என்பதே உண்மை. மேலும் தற்போது உள்ள டெட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம். அதனால் 6,00,000 தேர்வர்களில் 90 மதிப்பெண்களுக்கு பெற்று தாள் 2ல் 14700 தேர்வர்கள் மட்டுமே முதலில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7) தற்போது நடந்த கலந்தாய்வில் கூட 10 வருடங்களுக்கு முன்னர் படித்த பலரும் கலந்துகொண்டு பணி இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படவில்லையா? என்ன?
பதில் -  ஒரு சிலரை மட்டும் கணக்கெடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக தமிழ் பாடத்தில் 21-25 வயதிற்குள் 14.7 சதவீதம் பணி, 25-30 வயதிற்குள் 66.8 சதவீதம் தேர்வர்களும் , 30 - 58 வயதிற்குள் 18.5 சதவீதம் மூத்தோர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மூத்தோர்களுக்கு இந்த வெயிட்டேஜ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

8)  இதே வெயிட்டேஜ் முறையில் ஒருவேளை தங்களுக்கு மட்டும் இறுதி பட்டியலில் இடம் கிடைத்திருந்தால், அப்போதும் வெயிட்டேஜ் முறையை நீக்கக்கோரி போராடி இருப்பீர்களா?
பதில் - வருங்கால சந்ததியை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் அப்போதும் போராடி இருப்போம் என உறுதி தெரிவிக்கிறோம்.

9)  கோபால் - டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மற்றொரு இளங்கலை டி.ஆர்.பி. தேர்வு வைத்து அதன் மூலம் பணி நியமனம் நடைபெறுவதாக இருந்தால் அதை ஒத்துக்கொள்வீர்களா?
பதில் - அதற்கும் நாங்கள் தயார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

10) பிரிய தர்ஷினி - டெட் தேர்வு என்பது இரண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான, தெளிவான நடைமுறை சாத்தியம் என கருதுகிறீர்களா?
பதில் - ”முதல் கோணல், முற்றிலும் கோணல்” - என்பது போல் துவக்கம் முதலே டெட் தேர்வு பணி நியமனத்தில் பல்வேறு சிக்கல்கள் இதுவரை ஏற்பட்டிருப்பதால், இப்போதே இதற்கு தீர்வு கண்டாக வேண்டும் என தான் நாங்கள் போராடுகிறோம்.

11)   கோபால கிருஷ்ணன் - ஒரு வேளை நீதிமன்றம் ஸ்டே ஆர்டரை நீக்கி பணி நியமனம் நடைபெற்று விட்டால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?
பதில் - அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாது என உறுதியாக நம்புகிறோம். ஒரு குடும்பத்திற்கு 5 நபர்கள் வீதம் பாதிக்கப்பட்ட 62,500 டெட் தேர்வர்களின் 3,12,500 நபர்களின் வாழ்வாதார பிரச்சினை இது. எனவே  நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என கருதுகிறோம். அப்படி ஒரு வேளை நீங்கள் கூறியது போல் தீர்ப்பு வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கையை போராட்டக்குழுவும், எதிர்காலமும் தீர்மானிக்கும்.

12) டெட் மதிப்பெண் மட்டுமே தகுதியான ஆசிரியர் தான் என நிர்ணயிக்க போதுமானதா?
பதில் - இதை ஒப்புக்கொள்ள மாட்டோம். தற்போது நடைபெறும் டெட் வினாத்தாளின் அடிப்படை அமைப்பு முறையே தவறு என்பதால் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்.  டெட் - 80 மதிப்பெண்ணும், பணி அனுபவம் - 10 மதிப்பெண்ணும், பதிவு மூப்பிற்கு - 10 மதிப்பெணும் வழங்கி பணி நியமனம் நடைபெற்றால், அது ஒரளவிற்கு ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறோம்.

13)  10 வருடங்களுக்கு முன்னரும் 12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இருக்கிறார்களே? அதனால் 10 வருடங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான கூற்று தானே?
பதில் - 10 வருடங்களுக்கு முன் மாநில அளவில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் 1000க்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது புள்ளி விரங்களின் அடிப்படையில் உள்ள விளக்கம்.. எனவே மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்களை தற்போது உள்ள மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் நாங்கள் கூறுவது உண்மை என உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

14)  உண்மையில் உங்கள் போராட்டம் வெயிட்டேஜ் முறைக்கு எதிரானதா? அல்லது இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதா?
பதில் - வெயிட்டேஜ் முறைக்கு மட்டுமே எங்கள் போராட்டம் எதிரானது. இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானது அல்ல. அடித்தட்டு மக்களை முன்னேற்ற இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என கருதுகிறோம்.

15) சுருளிவேல் - எந்த காரணங்களுக்குாக போராடுகிறீர்கள் என உங்கள் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க இயலுமா?
1) வெய்டேஜ் முறையை அறவே ஒழிக்க வேண்டும்.
2) தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற வேண்டும்.
3) 2013-14 மற்றும் 2014-15 காலிப்பணியிடங்களில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, கணக்கெடுத்து, பணியமர்த்தியபிறகே அடுத்த டெட் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும்.

16)  ராஜ்குமார் - பள்ளி , கல்லூரிகளின் சீரான தேர்வு முறையின் மூலம் பெறும் மதிப்பெண்களைப் போலல்லாமல் TET போன்ற தேர்வுகளில் 15 முதல் 20 சதவீதம்வரை LUCK MARK பெறலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அவ்வாறு உள்ளபோது மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் கோருவது தவறு இல்லையா?
பதில் - ஒரு தமிழாசிரியருக்கு 30 ஆங்கில வினாக்கள், 60 சமூக அறிவியல் வினாக்கள் இடம்பெறும்போது, வினாத்தாள் அடிப்படையே தவறு என உறுதியாகிறது. எனவே டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நாங்கள் கேட்பது என்ன தவறு?.

17) கௌதம், வேலூர் மாவட்டம் - டெட் தேர்வு என அல்லாமல், எந்த தேர்விலுமே சராசரி மாணவர்கள் வெற்றி பெற்று வேலைக்கு செல்வது கடினம் தானே?
பதில் - இது தவறு. இதனை சமூகம் தீர்மானிக்கும். சராசரி மாணவர்கள் பலரும் IAS, IPS உட்பட பல்வேறு உயர் பதவி ஏற்றுள்ளனர். எனவே சராசரி மாணவர்களும் உரிய நேரத்தில் உரிய உழைப்பை வழங்கும் போது நிச்சயம் வெற்றி பெற இயலும்.

18) எந்த முறையில் பணி நியமனம் நடைபெற்றாலும் 15000 ஆசிரியர்களுக்கு மேல் மீதமிருப்பவர்களுக்கு பாதிப்பு தான். அப்படியிருக்க அவர்களுக்கு தங்கள் பதில் என்ன?
பதில் - டெட் மதிப்பெண் முறையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு, மீதமிருக்கும் பணி இடங்களிலும், கூடுதல் பணிஇடங்களிலும், தற்போது பாதிக்கப்படுபவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றுதான் உறுதியாக கோருகிறோம்.

19) ஆரோக்கியராஜ் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த தேர்வில் முன்னுரிமை கேட்பது நியாயமா? அதை விடுத்து வெயிட்டேஜ் ரத்து செய்ய கோரி போராட்டம் என்ற பெயரில் அரசு பணிகளை முடக்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயமா?
பதில் - தற்போதே ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் 118 மதிப்பெண்கள் பெற்று எங்கள் திறமையை நிரூபித்துள்ளோம். எனவே நாங்கள் முன்னுரிமை கேட்பது நியாயமானது.

20) கார்த்திக் விசாலம் - போராட்ட களத்தில் இருப்பதால் உங்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. இதனால் ஒருவேளை எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்போதும் எங்களுக்காக நீங்கள் போராடுவீர்களா?
பதில் - 2012லேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராயுள்ளோம். எனவே பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், நிச்சயம் போராடுவோம். 

21) மனசாட்சிப்படி கூறுங்கள் - அரசை நிர்பந்திப்பதற்காக வருங்கால ஆசிரியர்களாகிய நீங்கள் ”தற்கொலை முயற்சி” போன்றவற்றில் ஈடுபட்டு மிரட்டுவது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் நிலையை விளக்க முயன்றும், எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜன நாயக உரிமைகள் மதிக்கப்படவில்லை. எனவே அதிகபடியான ஏமாற்றம் மற்றும் தொடர் ஏமாற்றம் காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி நடைபெற்றது. இது மனித இயல்பு.

22) வெயிட்டேஜ் முறை சரி எனவும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் ஒருவேளை நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அப்போதும் எதிர்கால ஆசிரிய சமூகத்திற்காக, வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவீர்களா? அல்லது தங்களுக்கு பணி நியமனம் கிடைத்த வரை போதும் என போராட்டத்தை நிறுத்தி விடுவீர்களா?
பதில் - அப்போதும் அடுத்த தலைமுறைக்காக - நிச்சயம் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவோம்.

23) தற்போது தேர்வு பெற்று பணி இடத்தை தேர்வு செய்திருப்பவர்களுக்கும் பாதிப்பில்லாமல், தங்களுக்கும் பணி கிடைக்க தாங்கள் முன் வைக்கும் தீர்வு தான் என்ன?
பதில் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு 2013-14 காலிப்பணியிடங்கள், 2014-15 காலிப்பணியிடங்கள், ஆதிதிராவிடர் மற்றம் நலத்துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்றவற்றில் காலிப்பணியிடங்கள் கணக்கெடுத்து, எவருக்கும் பாதிப்பு இல்லாமல் தற்போது தேர்வு பட்டியில் இடம்பெற்று பணி நியமனம் கிடைக்காமல் பாதிக்கப்படுவர்களுக்கும் பணி நியமனம் வழங்கலாம். இதுவே நாங்கள் முன்வைக்கும் தேர்வு.

"Life life enjoy, life is our hand"
 
பதில் வழங்கிய போராட்ட குழுவினர்: - திரு. செல்லதுரை, ராஜலிங்கம், கபிலன், எம். செந்தில் குமார், மகேஷ்பாபு, சசிகலா, புனிதா, எழிலரசி, மேகலா ஆகியோருக்கு நன்றி!

        நம் பாடசாலை வலைதள கமெண்ட் பாக்சில் பதிவிடப்பட்ட கேள்விகளின் சாராம்சமும், அதற்கு போராட்டகுழுவினர் வழங்கிய பதில்களும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

நன்றி!
அன்புடன் - பாடசாலை.




81 Comments:

  1. பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
    நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. 118 மதிப்பெண் பெற்று பணி கிடைக்கவில்லை போராட்டம் நடத்துகிறார்கள் 88 மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி கிடைத்துள்ளது. நிங்கள் கேட்பது பேல் 10 மதிப்பெண் இல்லை 20 மதிப்பெண் கூடுதலாக பெற்றுள்ளன்.

      Delete
    2. Ithu varai arasin entha thuraikkum intha weightage murai kondu varapadavillai, ithu varai ......
      Thervu mark
      employment seniprity
      expiriance
      thurai sambanthamana patta merpadippugal
      ponra anaithu thaguthigalilum silavatrukku mathippen vazhangi paniniyamanam seivargal, aanal ingu ellame thavaru , thaniyar palli & kalloorigalukku intha weightage murai athiga mukkiyathuvam tharugirathu.

      Delete
    3. This batch is very difficult to come to conclusion. So give job to all candidate whether full time or part time teacher that is better to all. Because our CM already told in the MP election (concession of 5% relaxation) AMMA got 39 sheets. Now give job to all passed candidate AMMA own 234 MLA in future that is true, because the teachers more contact with public.

      Delete

    4. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      ப்ரியவர்தனா weightage slab system க்கு எதிரா case போட்டு ஜெயிச்சதுனால அத cancel பண்ணிட்டு GO 71 கொண்டு வந்தாங்க.

      Slab systemத்த எந்த அடிப்படையில கொண்டு வந்தீங்கண்ணு நீதிபதி, அதிகாரிகள் கிட்ட கேட்டாரு. ஆனா அவங்களால சரியான பதில் சொல்லவே முடியல. அதனால slab system கொண்டு வர எந்த வித முகாந்திரமும் இல்லன்னு cancel பண்ணிட்டாரு.

      அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15ம் எந்த அடிப்படைல கொண்டு வந்தீங்கன்னு அதிகாரிகள்ட்ட கேட்டா அவங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.

      ஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, Weightage Systemதை கொண்டு வந்ததுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லன்னு Weightage System தையே cancel பண்ணிடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    5. அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15 கூட எடுக்காதயா வந்து STAY கேக்கறீங்கன்னு கேட்டா உங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.

      ஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, எந்த Systemதை கொண்டு வந்தாலும் தேற எந்த வித முகாந்திரமும் இல்லன்னு STAYவை cancel பண்ணிடுவாங்களா daddy ....

      Delete
    6. போடு இப்பஎன்னபன்னுவீங்க

      Delete
  2. இதற்கு உங்களின் விளக்கம் மற்றும் பதில் தேவை..
    TET 4 mark- 1.6
    HSC180 mark- 1.5
    DEG 400 mark- 1.5
    B.ED 220 mark- 1.5

    ReplyDelete
    Replies
    1. 1.5+1.5+1.5=4.5(12 tet mark)...
      4.5=0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1+0.1............................
      Ipo tet pass panni job kidaikadhavanga 100% next tet ezhudhuvaanga..weightage increase panna...but degree +2...mmhm..

      Delete
    2. +2 la apo improvement exam irundhuchu..but medical engineering poravangaluku use aachu...ippavum irundhuchuna ok..

      Delete
    3. Indru 499 &1150 mark edukum maanavargaluku katrukodukum aasiriyargal 600 mark eduthavargalagavum irukum..avargal endha tet ezhudhiyavargal...

      Delete
    4. 14/09/2014
      ஞாயிற்றுக்கிழமை
      திருச்சி (அ) சென்னை..

      மாபெரும் நன்றி தெரிவிக்கும் மாநாடு..

      இதற்கு உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.. இதுவரை பொறுத்தது போதும்.. இனி நகரும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது..
      இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..

      Delete
    5. tet exam 2 years vennamnu soillalamtet exam 2 years vennamnu soillalam

      Delete
    6. என்ன எதுக்கெடுத்தாலும் மார்க் போடுராங்க மார்க் போடுராங்க.னு சொல்ரீங்க... என்ன ஓசி.ல மார்க் போடுராங்களா... 2013 TET எழுதிய தேர்வர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு முன் 12 படித்திருக்க வேண்டும்.. நீங்கள் கூறுவது போல் 5 வருடத்திற்கு முன் யாரும் மார்க் போடவில்லை... சும்மா பேசனும்.னு எதவாச்சும் பேசாதீர்கள்....

      Delete
    7. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

      Delete
    8. வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய. வேண்டும் , போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள் BY. கிராமத்தில் 13. கிலோமீட்டர் சைக்கிளில் சென்று அரசு பள்ளியில் படித்ததால் ,TET. ல் இந்த. வெயிட்டேஜ் முறையால் பாதித்த. மாணவன்.

      Delete
  3. பாடசாலை நிர்வாகி அவர்களே சில வினாக்களுக்கு. போரட்டகளத்தில் இல்லாத என்னை போன்றோரும் பதில் அளிக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. Sure sir. Give your valuable comments & answers.

      Delete
  4. TET Stay Order: Expecting Judgements? Article Published in www.TrbTnpsc.com

    Please Visit.

    ReplyDelete
  5. TET la 90 kku maela eduthu age 30 kkum athigama (34-34-40)
    irukkuravanga life?

    ReplyDelete
  6. டெட் தேர்வு என்பது இர ண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான தெளிவான நடைமுறை சாத்தியமா?

    ReplyDelete
  7. அட்மின் சார் எப்போது கேளவிக்கான பதிலை கொடுப்பீர்கள்

    ReplyDelete
  8. என்ன சார் பதிவேற்றம் செய்யலயா
    இன்று போராட்டம் பற்றி எழுதுங்க
    ஆவலுடன் இருக்கிறேன்

    ReplyDelete
  9. All porattakararkaluku oru vendukol epo nenga entha nilaimaiku vanthathuku mukkiya karanam 5% thalarvu than. athuvum all arasiyalvathikalal vanthinga epo unkaluku uthavuvathupole paasangu kattukirarkal kalainkar, Ramathas, vijaykanth

    ReplyDelete
    Replies
    1. ஐயா குட்டய. குழப்பாதீங்க

      Delete
  10. tet il pass anavanga TRB exam eluthavendum?

    ReplyDelete
  11. above questions are against poratta kuzhuvinar

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் குறித்து ஒரு தெளிவு ஏற்படுத்தவே இக்கேள்விகளும், அதற்கான பதில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

      Delete
  12. போராட்டத்தினால் அனைவருக்கும் வேலை கிடைக்காது என உங்களுக்கே தொியும் எனவே அடுத்தமுறை முன்னுரிமை கேட்டால் ஒருவேளை அரசு உங்களின் கோரிக்கையை பாிசீலிக்க வாய்ப்பு உண்டு இதனால் அனைவரும் பயன்பற வாய்புண்டு அல்லவா நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. முன்னுாிமையா? போராட்டம் அனைவருக்கும் வேலை வேண்டும் என்பதற்காக அல்ல. வெயிட்டேஜ் நீக்கப்பட்ட நியாயமான பணி நியமனம் வேண்டும் என்பதற்காகதான் நண்பரே.

      Delete
    2. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

      Delete
    3. weightage murayai neekkuvadhu niyayam yenru neengal koora koodadhu... needhimandram koora vendum

      Delete
    4. ramesh உண்மை செய்தி

      Delete
  13. 1) இருவர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 95 மதிப்பென் பெருகின்றார்கள். ஒருவர் சென்ற ஆன்டு பி.எட் முடித்தவர், மற்றொருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.எட் முடித்தவர் எனில் யாருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
    10 ஆண்டுகளுக்கு முன்பு பி.எட் முடித்தவருக்குத்தானே?

    2) அதேபோல் மற்ற இருவருர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.எட் முடித்தவர்கள். ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் வேறு தொழில் செய்கிறார் எனில் யாருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
    10 ஆண்டுகளாக ஆசிரியத் தொழில் செய்பவருக்குத்தணே?

    எனில் சீனியரிட்டியையும், பணி அனுபவத்தையும் எடுத்துக்கொள்வதல்ல்வா சிறந்தது.

    ReplyDelete
  14. அன்புள்ள ஆசிரிய நண்பர்களே

    ஆசிரியப் பெருமக்களின் போராட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் ஒரு முறை இதைப் படியுங்கள்.
    இது வரை அரசு செய்த பிழைகளாக கருதப்படுபவை
    1.2012 ஆண்டு டெட்டில் இடவொதிக்கீடு தராமல் இருந்தது(அப்போதும் 83/150 க்கு பல கோரிக்கைகளை வைத்தோம்).
    2.2012 டெட்டில் இடஒதுக்கீட்டை சரி வர பின்பற்றாதது(தேரிய அனைவருக்கும் பணிவழங்க வேண்டி).
    3.2013 முதலில் 90 /150 மதிப்பெண்கள் தான் வரையறை செய்யப்பட்டு பின்பு 82/150 ஆக மாற்றியது.
    4.அறிவியல் முறை என்று கூறி த்குதிகாண் மதிப்பெண் நிர்ணயம் செய்து உங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு 2013-14 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது.
    5.தற்போது உள்ள மொத்த காலிப்பணியிடங்களை முறையாக பெறாமல் (அ) தேர்வர்களுக்கு தெரிவிக்காமல் உள்ளது.
    6. இவற்றிற்கும் மேலாக போராட்டம் வழுவடைந்துள்ள நிலையில் கூட எத்துணை எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் இருப்பது போன்றவை.

    என்னுடைய பார்வையில் டெட்
    1. அனைத்து துறை ஆசிரியருக்கும் டெட் என்பது வெரும் தகுதித்தேர்வாக கருதி , அவரவர் துறைக்கான சிறப்புத் தேர்வை வைக்கலாம் ( ஆசிரியர்களின் ஏகோபத்திய ஆதரவு இருந்தால்).ஆனால் அதற்கு முன் தேர்வு வைக்கும் முன்பே எல்லா பணியிடங்களும் இன வாரியாக முழுமையாக தெரிவித்தல் அவசியம். இதில் ஒரு காலிப்பணியிடமும் மறைக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    2. இல்லையெனில் இப்பொழுது டெட் தேர்வாகி உள்ளவர்களுக்கு அடுத்த தேர்வில் முன்னுரிமை.

    இதை 2 முறை தவிர ஏனைய அனைத்தும் சரியாகப் பொருந்தாது என்பதே என்னுடைய கருத்து.
    இது தவிர இப்பொழுது பணிநியமன ஆணை பெருபவரும் இப்போராட்டத்தை ஆதரிப்பதை தவிர வேறு ஒரு வழியும் இல்லை, ஏனெனில் இப்போது உங்களை அவசரமாக பணியமர்த்தும் அரசு நாளை கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி உங்களின் பதவி உயர்வை அரசே தடுக்கும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை தோழர்களே.பதவி உயர்வு தானே என்று நினைக்காதீர்கள் அந்நிலையில் இருந்து பின்னால் வருவதை முன்னால் யோசிக்கும் அளவு உங்களிடம் திறமை உள்ளதை அரசுக்கு நிருபியுங்கள்.

    கலகம் ஒன்று வராமல் வழியொன்றும் இல்லை .

    அதனால் சிந்தியுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!



    ReplyDelete
    Replies
    1. verum irandu maninera thervinai adippadaiyaga kondu voruvarukku velai valanginal, avar 20 aandugalaga palli,kallorigalil paditha padippinirkku mariyadhaiyee illaya....

      palar indha irandu mani nera thervil, lucky marks petru iruppargal.. avargalukku vaippu alikka sollugindreergala,

      TET exam yenbadhu verum thagudhi thervu mattume, idhil vetri petra anaivarukkum velai yenbadhu kidaiyadhu.. idhu munnera TRB thelivaga arivitha visayam.

      melum palli kallori padippinirku verum 40% madhippendhan kodukka pattu vulladhu.. meedham 60% madhippen TET examinirkkudhan kodukka pattu vulladhu... idhai endha vahayil neengal thavaru yenru koorugindreergal.


      Delete
  15. please fill the vacancy based upon the TET mark,SUBJECT wise and CASTE wise?so nobody affect by this method at the same time pls give the preference to other candidates in a next TET exam......SHANTHI tvmalai

    ReplyDelete
  16. please fill the vacancy based upon the TET mark,SUBJECT wise and CASTE wise?so nobody affect by this method at the same time pls give the preference to other candidates in a next TET exam......SHANTHI tvmalai

    ReplyDelete
  17. dear administrator. அவர்களே..... மேற்கண்ட வினாக்களுக்கு. நானும் பதில் அளிக்கலாமா என்று கூறுங்கள் . ஏனெனில். நானும் பாதிக்கபட்டவன் தான்.. என்னால் போராட்டக் களத்திற்கு செல்ல முடியவில்லை.... சரியான பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமையும் கூட... அனுமதி அளிப்பீர்களா?

    ReplyDelete
  18. ippoluthu poradupavargal employment seniority & experienceku mark vendum endru ean solrenga? eanna ungakitta athu athikama irukuna?

    ReplyDelete
    Replies
    1. Seniority
      expiriance
      ku mark kodukkanum aana illa...
      Atleast tet mark padiyavathu posting podanumngarthu than ippo kelviye ,indrya thiramai tet mark than .

      Delete
  19. S badha sir 10 mark athigamaga vangi erugun engalin nilamaisir ...

    ReplyDelete
  20. விமல் மணி, திருவண்ணாமலை மாவட்டம் - இது வரை பல போட்டித் தேர்வு எழுதி எதிலுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
    பதில் - வேறு பணிக்கு நாங்கள் எப்போதும் போகவில்லை. ஆசிரியர் பணி என்பது மட்டுமே எங்கள் கனவு, அதுவே எங்கள் லட்சியம். அதில் மட்டுமே நாங்கள் சாதிக்கவேண்டும் என கருதி அதற்காகவே உழைக்கிறோம்.
    அப்படி என்றால் இதற்கு முன் நடைபெற்ற UG TRB அதற்கு பிறகு நடைபெற்ற TET தேர்வில் என் வெற்றி பெறவில்லை ?

    ReplyDelete
  21. பகுதி நேர ஆசிரியர்களும் கணினி ஆசிரியர்களும் இணைந்து போராட வேண்டும்

    ReplyDelete
  22. ஒரு சிலா் ஆசிாியா் தற்கொலை செய்வது தவறு என்று சொல்கிறாா்கள். ஆசிாியா்கள் ரோல் மாடல் என்பதற்காக தன்னுடைய உாிமையை விட்டுகொடுக்கும் அப்பாவிகாளாகவும் இருக்க கூடாது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  23. பாஷா சாா் 10 மாா்க் அதிகமாக வாங்க சொல்ற நீங்க ஏன் டிஇடி ல எங்களைவிட அதிகமாா்க் வாங்க கூடாது. நீங்க சின்ன வயசுல நல்லா படிச்சவங்க நாங்க பொியவங்களா ஆன பிறகு நல்லா படிச்சவங்க அதனால மாா்க் பிரச்சனையே வேண்டாம். டிஇடி பாஸ் பன்ன எல்லாருக்கும் ஒரு போட்டி தோ்வு வைக்கட்டும் அதில் வெற்றி பெறுபவா் வேலை வாங்கி கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Dhinesh kumar jailani basha wtg 68 than sir
      42100963 tet MARK 87 THAN SIR ivar periya arivaali seniors la 118 aeduthavanga muttai

      im nathiya paper1 wtg 71.49 BC not select

      Delete
    2. neenga padicha padathaye iruvadhu varusama padichikittu irukkenga... naanga ippathan rendu varusama padikkirom.... neenga yeppadi yengaloda potti poda mudiyalam.. vena ippadi vechikalam, neenga tetla 120 yedutha pass... naanga 90 yedutha passs...

      Delete
  24. அரசு கல்லூரி மாணவர்களில் ஒரு சில மாணவர்கள் கூட 80 % க்கு மேல் மதிப்பெண் எடுக்க முடிவதில்லை தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு சில மாணவர்கள் கூட 60 % க்கு கீழ் எடுப்பது இல்லை இதன் இரகசியம் தெரிந்த அறிவாளி கள் சொல்லூங்கள் வெயிட்டேஜ் ஏற்புடையதூ தான?

    ReplyDelete
    Replies
    1. arasu palligalil aruvadhu sadhvidham mark kooda edukka mudiyadha manavargal dhideerendu TET examil mattum 110 mark vangiyadhu yeppadi....

      Delete
  25. TET oru thaguthi therve. Tet marks adipadai-il pani niyamanam irukka koodathu endru court judgement irukke. Adhai edhirthu porattam nadathuvathu sariya?

    ReplyDelete
    Replies
    1. senthil sir antha theerpil kooriya oru example method than intha scientific weitage method athu namaku porunthumanu paakama trb accept pannathu thavaru thana sir,adhu mattum illa neethiarasar theliva solli irunthar idhu pola oru scientific method nu...idhu than nu sollala

      Delete
    2. priya madem...neethiarasar sonnadhu yenna na... arasu needhimandram koorum pudhiya murayai nadai murai paduthalam alladhu veru voru scientific method payanpaduthalam yenrudhan koori irundhadhu....

      neethi arasar kooriyavare.. arasu adhe murayinai yetru kondu ulladhu...

      Delete
  26. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete
  27. அவர்கள் திறமையானவர்களே
    ஆகையால் தான் 90 க்கு மேல் பெற்று உள்ளனர்.

    அவர்களின் திறமைக்கான பலன் கிடைக்காததால் தான் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்

    ReplyDelete
  28. Padasalai paved a way to healthy Discussion. Good work...

    ReplyDelete
  29. Dear padasalai,
    Please update the cade details.

    ReplyDelete
  30. போராட்டாம் செய்பவர்கள் சார்பாக ,

    தேர்வாகி போராட்டம் செய்யும் வெய்ட்டேஜ் வேண்டும் என்போரிடம் ஒரு கேள்வி...???

    ஒருவர்10 ஆண்டுக்கு முன்னர் 2 வில் 50% மதிப்பெண் பெற்று அவர் பள்ளியில் நல்ல மதிப்பெண் என்ற பேரோடு( 15 ஆண்டுக்கு முன் 50% மதிப்பெண் மட்டுமே முதல் மதிப்பெண்ணாக பெற்ற கிராமபுற அரசு பள்ளிகள் நிறையவே இருந்தது... ஆசிரியர்களின் அறிவுரையும் பாஸ் ஆகிடுங்க போதும் என்றே இருந்தது...)

    பின் சென்னை பல்கலைகழகம் சென்று அங்கு 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் ( சென்னை பல்கலைகழகத்தில் 50% மதிப்பெண் பெற்ற ஒருவரால் தமிழகத்திலுள்ள பல பல்கலைகழகத்தில் சுலபமாக 75%-80% மதிப்பெண்கள் பெற இயலும் ஏனெனில் படத்திட்டத்தில் வேறுபாடு உள்ளது.

    பின்னர் அவர் பி.எட் ல் 60% மதிப்பெண் பெற்று

    10ஆண்டுகளாக தனியார் பள்ளியில் பல 100/100 பெறும் மாணவ மாணவிகளை உருவாக்கி வருகிறார்...

    அவர் ஆசிரியராக மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் பணிபுரியும் பள்ளிக்கும் , அவரது மாணவர்களுக்கும் நன்கு தெறிந்ததே...

    ஆனால் தங்களது வெய்ட்டேஜ் முறையில் அவர் ஆசிரியராக தேர்வாக வாய்ப்புள்ளதா ?

    அவர் பாடத்தில் 80 மதிப்பெண் வெய்ட்டேஜ் ஆக எடுத்தால் மட்டுமே இனி வரும் ஆண்டுகளில் வரும்
    காலிபணியுடங்களில் தேர்வாகலாம் என்ற சிறு நம்பிக்கையேனும்
    ஏற்படும்,

    2 = 50% =5 mark
    Degree= 50% =7.5mark
    B.Ed = 60% =9mark
    ToTal =21.5

    எனில் டிஇடி ல் 58.5 எடுத்தால் தான் 80மதிப்பெண் வெய்ட்டேஜ் பெற முடியும் இது சாத்தியமா ?

    147/150 டிஇடியில் எடுப்பது அவ்வளவு சுலபமா ?

    அரசு பள்ளியில் படித்தது குற்றமா ?
    டிஇடி என்று ஒன்று வரும் அதற்க்கு இந்த மதிப்பெண்கள் தேவை என தெறியாதது குற்றமா ?
    10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்தது குற்றமா ?

    அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காதெனில் ஒன்று நம் நாடு ஜனநாயக நாடல்ல...

    ஜனநாயக நாடெனில் பலருக்கு நியாயமான வாய்ப்பளிக்காத வெய்ட்டேஜ் சரியல்ல...

    இதில் எது சரி கூறுவீர்

    ReplyDelete
    Replies
    1. Murali solvathu 100% sari

      Delete
    2. பாடசாலை நண்பரே நீங்கள் நடு நிலைமையோடு செயல்படுங்கள் நண்பரே.... இங்கே பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தாரீர்.....

      Delete
    3. 15 andugal mubu padippai mudithavargalukku pala murai arasanga velai pera vaippu kidaithum avargal therchi peravillai yenral, avargal edhan adippadayil thagudhiyanavargal...

      neengale ungal sondha company ku aal edukkumbodhu, palamurai thotra voruvari velaikku amarthuveergala.

      Delete
  31. வெயிட்டேஜ் முறை ஒழிய. வேண்டும் போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள் by. கிராமத்தில் அரசு பள்ளியில் படித்ததால் TET. ல் பாதித்தவன்

    ReplyDelete
    Replies
    1. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  32. இந்த கருத்தை எல்லா தளங்களிலும் பதியுங்கள் நண்பா

    ReplyDelete
  33. பாவப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
    நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் ஓட்டுரீமை உண்டு…சமதர்மம் ,சமுகநீதி என்றால் என்ன ?
    அரசியல் கட்சிகளே ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை நடைமுறை படுத்தும்போது…………………………..
    அரசு வேளையில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வேளை முறை ஏன் அமல் படுத்த கூடாது ?
    அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் பட்டதாரி,முதல் அரசு வேலை பெறும் குடும்பம் என இலக்கு நிர்ணயம் செய்து தகுதி உள்ளவர்களுக்கு 20% அரசு வேளையில் ஒதுக்கிடு செய்தால் எல்லா மக்களும் பயன்பெறலாம்
    15 ஆயிரம் குடும்பமா ………….! 60 ஆயிரம் குடும்பமா ………….!
    மக்கள் நலன் என்றால் என்ன ? தமிழர்கள் நலன் காக்கும் செயல் எது?
    தமிழன் ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் தமிழகம் இருந்து என்ன பயன்?
    தலைவர்கள் இருந்து என்ன பயன்? மக்களுக்காக அரசா? அரசியலுகாக மக்களா?
    தமிழ்ன் நலம் காத்த தலைவர்கள் எங்கே?
    30 -58 வயது வரை வேலை செய்யும் அறிவார்ந்தவர்கள் அனுபவம் ,திறமை ,தமிழகத்திற்க்கு தேவயில்லயா? பட்டதாரிகள் பொறுத்தவரை
    வேலைவாய்ப்பு + டெட் +அனுபவம் என 3 க்கும் மதிப்பெண் வழங்கலாம்.
    இப்போது நிலை மிகவும் சிக்கலானது நல்ல தீர்வு எடுக்கப்பட்டால் சுபம்…………
    2016 ம் தேர்தல் மிகப்பெரிய மாற்றம் வர வாய்ப்பாக அமையும்.
    எல்லேரும் ஏற்க்கும் தீர்ப்பு எடுக்கப்பட்டால் சுபம்…
    பட்டதாரிகள் எங்களுக்கு குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி @@@@@@@@@@

    ReplyDelete
  34. பல ஆயிரம் பேர் 110 மதிப்பெண் மேல் எடுத்தும் மிக குறைந்த வெயிட்டேஜ் பெற்று உள்ளனர் இனி வரும் காலங்களில் இதை விட அதிக அளவிலான மதிப்பெண் பெற வாய்ப்பு இல்லை அப்படி பட்டவர்களின் கனவுகளுக்கும் கண்ணீருக்கும் விலை மதிப்பில்லாத காகால விரயத்திற்கும் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் கோருபவரின் உண்மையான பதில்? சரவணன், விழுப்புரம்

    ReplyDelete
  35. தகுதி தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியான தாகவும் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு ( மறைக்க பட்டது ) உள்ள நிலையில் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோருபவரின் பதில்?சரவணன், விழுப்புரம்

    ReplyDelete
  36. வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோருபவர்களும் தகுதி தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோருபவர்களும் தங்களது திறமையை குறித்தும் எதிர் தரப்பினரை கடுமையாக ஒருவரை ஒருவர் குறை கூறுவது விட தங்களது திறமையை நிரூபிக்க கேரளாவில் உள்ளது மற்றொரு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ இணைந்து போரட கூடாது சரவணன் விழுப்புரம்

    ReplyDelete
  37. All selected come to madurai on thursday with family contact mr prabhu 8807929982:visit www.selectedcandidates.com very imp

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. PG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar. Padasalai sthaabanam, itherku enna karuthu solla virumbukirathu.

    ReplyDelete
  40. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள் , வெயிட்டேஜ்முறை ஒழிய. வேண்டும் BY. கிராமத்தில் அரசு பள்ளியில் படித்ததால் TET. ல் பாதித்த. 45. வயதை கடந்த. மாணவன்.

    ReplyDelete
  41. நண்பர்களே! PG TRB தமிழ் பாடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன ஆணை பெற்று விட்டார்களா? நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா? தகவல் அறிந்த நண்பர்கள் சொல்ல வும்

    ReplyDelete
  42. Those who are affected weightage in Tirunelveli. Please contact:9944217792

    ReplyDelete
  43. தோழரே

    இதுதான் நீதி...

    சுயநலமற்று சிந்தியுங்கள் தோழர்களே....
    ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பணி நியமனத்திக்கு தகுதியாக்கும் ஒரு தேர்வு என்பது அனைவரும் அறிந்ததே.அவரவர்கள் எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றார்களோ அப்பாடத்தில் அவர்களது திறமையைச் சோதிப்பதாக இல்லை எனவே கீழ்கண்ட இரண்டு முறைகளில் ஒன்றுதான் சரியானத் தீர்வாக இருக்கமுடியும்.இவையிரண்டுமே ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணி நியமன முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் மற்ற எந்த முறையைக் கடைப் பிடித்தாலும் பாதிப்புதான்.

    1.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
    அல்லது
    2. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.


    நான் தகுதித்தேர்வு எழுதி தற்போது ஆசிரியப்பணிக்கு தேர்வு ஆனவனும் அல்ல.

    தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்காதவனும் அல்ல

    என் உறவினர்களும் இவ்வாறு யாரும் இல்லை

    இவ்விரண்டு நிலையிலும் இருந்தால் நிச்சயம் சுயநலம் தோன்றும்.

    நான் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் கவனித்துப் பாருங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது எனினும் இப்போது கடைபிடிக்கும்முறையை விட நிச்சயம் மேம்பட்டது என்பது புரியும் நன்றி

    ReplyDelete
  44. TET தேர்வு தேர்வர்களின் ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பணி நியமனத்திக்கு தகுதியாக்கும் ஒரு தேர்வு என்பது அனைவரும் அறிந்ததே.அவரவர்கள் எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றார்களோ அப்பாடத்தில் அவர்களது திறமையைச் சோதிப்பதாக இல்லை என்பதும் போராடும் அனைவருக்கும் தெரிந்தும் ஏன் அம்மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வலியுறுத்துகின்றனர்? தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்கள் பாடத்தில் நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும். என்பது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கையை முன்வைக்கவில்லை?

    ReplyDelete
  45. அட்மின் சார் அவர்களே, எனது 4 கேள்விக்கு பதில் இல்லையா? Delete என்று போட்டுள்ளிர்கள் என் கேள்வி தவறா?

    ReplyDelete
  46. அவர் பாடத்தில் 80 மதிப்பெண் வெய்ட்டேஜ் ஆக எடுத்தால் மட்டுமே இனி வரும் ஆண்டுகளில் வரும்
    காலிபணியுடங்களில் தேர்வாகலாம் என்ற சிறு நம்பிக்கையேனும்
    ஏற்படும்,

    2 = 50% =5 mark
    Degree= 50% =7.5mark
    B.Ed = 60% =9mark
    ToTal =21.5

    எனில் டிஇடி ல் 58.5 எடுத்தால் தான் 80மதிப்பெண் வெய்ட்டேஜ் பெற முடியும் இது சாத்தியமா ?

    147/150 டிஇடியில் எடுப்பது அவ்வளவு சுலபமா ?

    அரசு பள்ளியில் படித்தது குற்றமா ?
    டிஇடி என்று ஒன்று வரும் அதற்க்கு இந்த மதிப்பெண்கள் தேவை என தெறியாதது குற்றமா ?
    10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்தது குற்றமா ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive