NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவியை கொன்றது எப்படி? மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

          ஆறாம் வகுப்பு மாணவியை கொன்றது பற்றி, 10ம் வகுப்பு மாணவன் கொடுத்த வாக்குமூலம், போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், மாச்சனூர் அரசு பள்ளி, ஆறாம் வகுப்பு மாணவியை கொலை செய்த, அதே பள்ளி, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார், ஓசூரில் கைது செய்தனர்.


மாணவனின் வாக்குமூலம்:
பள்ளியில் இருந்து, கடந்த 15ம் தேதி, வீட்டுக்கு சென்ற போது, மாணவியை குறுக்கு வழியில் அழைத்துச் செல்வதாக கூறி, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றேன். யாரும் இல்லாத பகுதியில், அவரது அந்தரங்க உறுப்பை காட்ட சொன்னேன். அவர் துணியை கழற்ற மறுத்து, அவருடைய அப்பாவிடம் சொல்வதாக கூறினார். இதையடுத்து, அவரது கழுத்தை நெரித்தேன். மயக்கமடைந்து விழுந்தவளை, அவள் அணிந்து இருந்த, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினேன். அவளது ரிப்பன்களை எடுத்து, கை, கால்களை கட்டினேன். அருகில் கிடந்த பழைய பாட்டிலை எடுத்து, தலையில் அடித்து, உடைந்த கண்ணாடியால் மார்பு பகுதியில் கிழித்தேன். அவரது இங்க் பேனாவை எடுத்து, அந்தரங்க உறுப்பில் குத்தி கொலை செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து, அடிக்கடி மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களில், புளூபிலிம்' பார்ப்பேன். அதனால் தான், அவளை நிர்வாணமாக பார்க்க முயன்றேன். இவ்வாறு, மாணவன் கூறியுள்ளான்.
உறவினர்கள் போராட்டம்:
இந்நிலையில், மாணவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து, தகவலறிந்த மாணவியின் உறவினர்கள், காவல் நிலையம் முன் குவிந்தனர். கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும், கைது செய்ய வேண்டும் எனவும், உடல் பரிசோதனையை, அரசியல் கட்சி நிர்பந்தமின்றி, மேற்கொள்ளவும் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை அடித்து விரட்டினர். சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. மாணவர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்பகுதியில், 15 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வேப்பனேரி அரசு பள்ளியை, பெற்றோர் பூட்டு போட்டு பூட்டி, மாணவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12:00 மணிக்கு, கலெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை ஏற்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்தி, மேல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து, இரண்டு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின், மாணவியின் உடல், அவரது சொந்த ஊரில், மாலை 6:30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலையீடு:
'அரசியல் கட்சிகள், தங்கள் ஜாதியைச் சேர்ந்த, மாணவர்களை காப்பாற்ற, கொலை வழக்கில், மூக்கை நுழைத்துள்ளன. அவர்களை திருப்திப்படுத்த, போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கொலை குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் உத்தரவு:
மாணவியின் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டு உள்ளார். மேலும், இவ்வழக்கில் புலன் விசாரணையை விரைவாக முடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், டி.ஜி.பி.,க்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.




9 Comments:

  1. அரசியல் வர்க்கமே உனக்கு அசிங்கமாக இல்லையா ???

    இந்த குற்றவாளிகளுக்கு "சிறார்கள்" என காரணம் காட்டி அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து வருடங்களை தண்டனை வாங்கி கொடுக்க அரசியல்வாதிகள் முயல்வார்கள் ..

    காவல்துறை அதிகாரிகளே & நீதியரசர்களே ... இறந்தது ஓர் உயிர் என கருதாமல் "கொடூரமாக கருக்கப்பட்டது ஓர் பிஞ்சு " என்பதை கருதி அந்த கொடூரமான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தாருங்கள் ..

    இதுவே அந்த காமுகர்களுக்கு "மிக மிக குறைந்தபட்ச தண்டனை தான் "

    ReplyDelete
  2. மரண தண்டனை தீர்வல்ல.
    மரண பயமே வாழ்நாள்தண்டனை

    ReplyDelete
    Replies
    1. இறந்த பிஞ்சை உங்கள் பிஞ்சாக நினைத்து பாருங்கள் . .கத்தி உங்கள் கையில் இருக்கும்
      இன்று அந்த குழந்தைக்கு நேர்ந்த கதி நாளை எந்த குழந்தைக்கும் நடக்கும்...

      Delete
  3. மரண பயம் எப்படி தருவது?

    ReplyDelete
  4. மாணவனை வெளியே விட்டு ; பெற்றோர்களுக்கு பயம் தருவது .

    ReplyDelete
  5. மாணவனை வெளியே விட்டு ; பெற்றோர்களுக்கு பயம் தருவது .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஆண் இனம் வெட்கப்பட வேண்டிய தருணம் இது:

    ஆணாய் பிறந்த யாவரும் கூனிக் குறுக வேண்டிய வெட்கக்கேடான தருணம் இது.
    மேலை நாட்டு நீலப்படங்களும், பாலுணர்வூட்டும் தமிழ் திரைப்படங்களும் வளர்இளம் பருவத்தினர்க்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் எளிதாய் கிடைத்ததன் விளைவு இது.

    மங்கையின் கர்பப்பையும் பிறப்பு உறுப்பும் - மனித வர்க்கம் புதிதாய் உற்பத்திக்கவும், பிறக்கவும் - இயற்கை வழங்கிய அற்பதங்கள்.

    பிரசவ அறையில் பச்சிளம் குழந்தையை நிறைமாதக் கர்ப்பிணி பிரசவிக்க படும் அவஸ்தையை - பாலுணர்வு  ஆண்குழந்தையிடம் தொடங்கும் 13 வயது  முதல் நேரில் பார்க்க வைக்கப்பட வேண்டும்.

    வைரமுத்து படைப்பில் பதிந்தது போல் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் மனைவியின் வலியை கணவர்கள் கண்ணால் காண வேண்டும்.

    ஒரு சிறிய முள்ளை பாதத்திலிருந்து ஊசியால் அகழ்ந்தெடுக்க எவ்வளவு வலி உணர்கிறோம். வெல்ல உருண்டையளவு குழந்தையின் தலையை பிரசவிக்க பெண்ணின் பிறப்பு உறுப்பு எவ்வளவு வலி கொள்ளும்?

    காவலர்கள் பெண்ணின் பிறப்பு உறுப்பு மீது எட்டி உதைக்கிறார்கள்; லத்தியை செலுத்துகிறார்கள்.

    இலங்கை சிங்கள இராணுவத்தினர் ஈழத்தமிழ்ப் போராளிப் பெண்களை கூட்டாக வண்புணர்ச்சி செய்து பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு பொருத்தி வெடிக்க வைத்தார்கள்.

    டெல்லி நிர்பயா பேருந்து வண்புணர்ச்சி நிகழ்வில் - பேருந்தில் கடைசியாய் நண்பணோடு நள்ளிரவு திரைப்படம் பார்த்து திரும்பிய கல்லூரி மாணவியை 4 வெறியர்கள் காட்டாயப்பாடுத்தி வண்புணர்ச்சி செய்த பின் - 5ஆவதாக 16 வயது சிறுவனால் வண்புணர்ச்சியில் ஈடுபட முடியாத இயலாமையால் - பேருந்தில் இருந்த தடிமனான இரும்பு கம்பியை பிறப்பு உறுப்பில் செலுத்தியிருக்கிறான். கம்பி பிறப்பு உறுப்பையும் கர்பப்பையையும் சிதைத்து உள்ளுறுப்புகளையும் கடுமையாக காயப்படுத்தியுள்ளது. ( நிர்பயாவின் மரணத்திற்கு காரணம் - 4 வெறியர்களின் வண்புணர்ச்சி அல்ல. 5ஆவது நபரான 16 வயது சிறுவனின் கொடூர செயல் மட்டுமே. சிகிச்சையளித்த டாக்டர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்) இருவரையும் உடைகள் ஏதுமில்லாமல் பேருந்திலிருந்து நடுஇரவில் சாலையில் கீழே
    உருட்டி தள்ளிவிட்டு தப்பிவிட்டனர். உள்ளுறுப்புகள் சிதைந்து இரத்தம் வெளியேறியபடி சில மணி நேரம் கழித்து நிர்பயா மீட்கப்பட்டது எத்தணை இந்தியர்களுக்கத் தெரியும்? கம்பியால் ஒரு முழம் அளவு உள்ளுறுப்புகள் அழுகிய நிலையில் - கடைசியாக அந்தப் பேதைப் பெண் என்ன நினைத்தபடி கண்ணீர் வடித்து இறந்தாளோ நினைத்துப் பாருங்கள் ஆண்களே!

    இங்கு நம் மாவட்டத்தில் நம் பள்ளியில், 10 ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுவன் தன் அருகாமை வீட்டு 11 வயது சக பள்ளிச்சிறுமியை தனியே அழைத்துப் போய் கை கால்களை கட்டி - கண்ணாடியால் மார்பு கிழித்து - பிறப்பு உறுப்பில் அப்பெண்ணின் இங்க் பேனாவைக் கொண்டு குத்தி(இதை எழுதும் போதே மனம் உதறுகிறது) கொடூரத்தின் உச்சத்தையும் கடந்து பாட்டிலில் மண்டை உடைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். என்ன அவஸ்தைபட்டிருக்கும் அந்தப் பிஞ்சு உடல்?

    சினிமா அல்லவா சிறுவர்களை தவறுதலாக வழிநடத்தும் மிக ஆபத்தான முதல் திசைதிருப்பி. எளிதாய் கிடைக்கும் நீலப்படங்கள் இளம்உள்ளங்களில் மிகையான பாலுணர்வைத் தூண்டி எல்லை மீறி கொலையே புரிய வைத்துவிட்டதல்லவா?

    எந்த ஆணையும் இனிப் பெண்இனம் கேவலமாய் சந்தேகக் கண் கொண்டு அல்லவா பார்க்கும்!

    முருங்கைக்காயை நறுக்குவது போல் வண்புணர்ச்சியாளர்களின் ஆணுறுப்பை நறுக்குகிறது அரபுநாட்டுச் சட்டம்.

    போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலை சந்திப்பில் வண்டியில் படுக்க வைக்கப்பட்ட வண்புணர்ச்சியாளர்களின் தலையை மட்டும் கீழே தொங்க விட்டு - சாலையில் மணல் பரப்பி - பளபளக்கும் நீள வாள் கொண்டு - ஒரே வெட்டாய் தலை துண்டிக்கிறது அரபுநாட்டுச் சட்டம்.

    நம் நாட்டில் சட்டம் திருத்தவில்லையாயினும் -
    ஆண்கள் நாம் மனம் திருந்தலாமே!

    - ஆணாய்ப் பிறந்தததற்கு வெட்கப்படும்
    ஆடவர்களில் ஒருவன்.

    ReplyDelete
  8. Ban the blue film websites and add the moral in subjects

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive