NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசுத்துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

      மத்திய பொதுப்பணித்துறை (Central Public Works Department), அஞ்சல் துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொறியியல் பணி (Military Engineering Service) , மத்திய நீர் ஆணையம் (Central Water Commission)ஆகிய துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 06.12.2015 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015
பதவி: Junior Engineer Group 'B'
காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம்:
Central Public Work Department
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
Department of Posts
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
Military Engineering Service
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
Central Water Commission
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை பின்னர் முடிவு செய்யப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் துறையில் பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருவனந்தபுரம்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
தாள்-I-ல் கொள்குறி வகை கேள்விகளும், தாள் - II-ல் விரிவான விடையளிக்கும் கேள்விகளும் கேட்கப்படும்.
தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் பெறப்படும் செல்லான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது நெட்பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in. http://ssconline2.gov.in என்ற இணையதளத்தங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஆன்லைன் படிவத்தின் பகுதி I-ஐ 07.08.2015 வரையிலும், பகுதி II படிவத்தை 10.08.2015 வரையிலும் நிரப்பலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களும் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive