NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு 29-ல் தொடக்கம்:8 மையங்களில் நடைபெறுகிறது

       திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 மையங்களில் ஜூன் 29-ஆம் தேதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.

         2016 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில், தேர்ச்சி பெறாத மாணவ - மாணவிகள் உடனடி சிறப்புத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று கல்வித் துறை தெரிவித்திருந்தது.


இதையடுத்து, ஏராளமான மாணவ - மாணவிகள் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள் ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.

30-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும், ஜூலை 1-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வும், 2-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாளும், 4-ம் தேதி கணித தேர்வும், 5-ம் தேதி அறிவியல் தேர்வும், 6-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.

இதற்காக, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive