தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக
செயல்படுத்தி வரும் விலையில்லா திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கடந்தாண்டில்
14 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகத்தை முழுமையான கல்வியறிவு பெற்ற
மாநிலமாக மாற்றிட, மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளி இடை நிற்றலைத் தவிர்த்திட
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில், மாணவர்களுக்கு சீருடை,
பாடப்புத்தகம், கல்வி உபகரணம், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14
விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு,
நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தமுள்ள
281 பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்து 80 ஆயிரத்து மாணவ, மாணவியர்களுக்கு
கடந்தாண்டு தமிழக அரசின் விலையில்லா திட்டங்கள் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
அதில் 4.68 லட்சம் விலையில்லா புத்தகம்; 11.20 லட்சம் நோட்டுகள்; 35,068
புத்தகப்பை; 20,129 காலணி; 20,067 ஜாமின்ட்ரி பாக்ஸ்; 40,184 அட்லஸ்;
55,356 சீருடை; 70,257 பஸ் பாஸ்; 21,801 லாப்டாப்; 24,709 சைக்கிள்
வழங்கப்பட்டுள்ளது. மேலும், 72 ஆயிரத்து 554 மாணவர்கள் சிறப்பு ஊக்கத்தொகை
பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...