NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு

           'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது. அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
.
192 ஆக...: அதனால், பேராசிரியர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு முடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயது வரம்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வயது வரம்பு, 57 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, உதவி பேராசிரியர் நியமனத்துக்கான புதிய அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அதில், பணியிடம் எண்ணிக்கை, 192 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய விதிமுறைகள் : அதன்படி ஆகஸ்ட், 17ல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. செப்டம்பர், 7க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர், 22ல் தேர்வு நடத்தப்படும்.
இதில், 2014ம் ஆண்டு அறிவிப்பின் படி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால், புதிய விதிமுறைகளை அவர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, http://trb.tn.nic.in/இணையதளத்தில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive