NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு.

    விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார்அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
       இதற்கான பதிவுகளைக் கணினியில் மேற்கொண்டு, விரைவாகப் பெற்றுத் தருவதற்காக மாவட்டங்கள்தோறும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், ஒன்றியங்களில் தொடர்புடைய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாகவும் செயல்பட உள்ளனர்.

இதுதொடர்பாக ஆகஸ்ட் 1-இல் நடைபெறும் காணொலிக் காட்சிமூலமான ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது, பதிவை மேற்கொள்ளாத மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தொகுத்து வழங்க வேண்டும். இதன்படி, ஆதார்பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.செப்டம்பர் 25-க்குள் விடுபட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும், தொடக்கக் கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்கக் கல்வித்துறை இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive