NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன்... கிடைக்குமா குறைதீர் மன்றத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

        கடலுார் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் கல்விக்கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
 
           திறமை இருந்தும், ஏழ்மை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத நிலையை போக்கும் வகையில் கடந்த காங்., ஆட்சியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிக்க தகுதிப் பெற்ற மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெற்று படிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சொத்து ஜாமின் கொடுக்காமலேயே வங்கிகளில் கல்விக் கடன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றியுள்ளனர்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
பொறியியல் படிப்புகளுக்காக கல்விக்கடன் கேட்டு பலர் 2, 3 ஆண்டுகளாக கூட வங்கிகளுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் வாரம் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுப்பது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சாதாரணமாக கிடைத்த கல்விக்கடன் தற்போது மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
ஒவ்வொரு வங்கியும் கல்விக்கடன் வழங்க தங்கள் சர்வீஸ் ஏரியாவை ஒதுக்கிக்கொண்டன. அவ்வாறு இருந்தும் குறைந்தபட்ச மனுக்களுக்கு கூட கடன் வழங்க மறுக்கின்றன.
தற்போது கல்வி கடன் வழங்க முன்னோடி
வங்கிகள் வழக்கமாக பெறும் சான்றிதழ்களோடு சிறந்த கல்லுாரியாக இருக்க வேண்டும், கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெற்றிருக்க வேண்டும், குறிப்பிட்ட கல்லுாரிகள் எந்தளவு வேலைவாய்ப்பை வழங்கி
வருகின்றன என்பது குறித்து சான்றிதழ், ஏ.ஐ.சி.டி.இ., அப்ரூவல் உள்ளதா என தேவையற்ற சான்றிதழ் கேட்டு மாணவர்களை அலைக் கழிக்கின்றனர்.
ஏன் கிடைப்பதில்லை
இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: கல்விக்கடன் பெறுவர்கள் யாரும் முறையாக திருப்பி செலுத்துவதில்லை. பலர் கடன்கள் எல்லாம் தள்ளுபடி ஆகிவிடும் என்ற தவறான கணிப்பில் உள்ளனர். இதனால் முறையான வட்டியும் செலுத்துவதில்லை. இதனால் கல்விக்கடன் வழங்குவது குறைந்துவிட்டது. மகனுக்கு கடன் பெறும் தந்தையும் இதற்கு ஜாமினாக கையெழுத்துப் பெறப்படுகிறது. கடனை முறையாக செலுத்தாதவர்கள் வாராக்கடன்களாக மாறிவிடுகின்றன. இந்நிலையில் பெற்றோர்கள் வாகனக்கடன், பயிர்கடன் கேட்டு வருபவர்கள் 'சிபிலில்' சிக்கி கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive