NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

       “ஒளிவு மறைவின்றி ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்” என, பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட தொடக்கல்விஅலுவலர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணி அமர்த்தப் படுகின்றனர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பதவி உயர்வில் சென்றவுடன் அந்த பணியிடங்கள் காலியாகும்.அதில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். பின், ஆண்டுதோறும் மே மாதம் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள்ளாக பணி மாறுதல்கள் வழங்க கலந்தாய்வுகள் வருவாய் மாவட்டங்களில் நடத்தப்படும்.

தற்போது, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிபாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பதவி உயர்வு வழங்கிய பின்,பணிமாறுதல் ஒளிவு மறைவின்றி நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாநிலக்கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடந்தது. அதில் மாநிலத்தலைவர் இளங்கோவன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் விரும்பத்தக்க வகையில் பதவி உயர்வு வழங்கிய பின், கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும், என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive