NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாய்பேச முடியாத மாணவருக்கு வங்கிக்கடனை கேட்டு மிரட்டல்...!

         அரசு வங்கி கடனை திரும்ப கேட்டு தனியார் நிறுவனம் மூலம் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி இன்ஜினியரிங் மாணவனை மிரட்டுவதாக அவரது தந்தை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். மதுரை பொன்னகரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். 

             இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவரது மகன் ராகேஷ், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சிறப்பு சலுகை மூலம் 6 ஆண்டு கால பிடெக் படித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள அரசு வங்கியில் 4 வருடங்களுக்கு முன்பு கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தார். இதன்படி, வருடத்துக்கு ரூ.65 ஆயிரம் வீதம், 6 வருடத்திற்கு ரூ.3.96 லட்சம் வழங்க, வங்கி சம்மதித்து ஒப்புதல் கடிதம் கொடுத்தது.
 இதன்பேரில் கடந்த 4 வருடங்களாக கல்விக்கடன் வழங்கியது.
இந்தாண்டு 5ம் வருடத்திற்கான கடனை பெற, மாணவர் ராகேஷ் வங்கிக்கு சென்றார். 'உங்களுக்கு கல்விக்கடன் முடிந்து விட்டது. மேலும் கடன் தர முடியாது' என அதிகாரிகள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ், 'கடன் அளித்தால்தான் படிப்பை தொடர முடியும்' என தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், 'உங்கள் வங்கிக் கடன் கணக்கை முடித்து, வசூல் செய்ய அனுப்பிவிட்டோம்' என்று கூறினர். இந்நிலையில் தனியார் நிறுவனம் மூலம் கல்விக்கடனை கட்ட கூறி மாணவருக்கு மிரட்டல் வந்தது. வேதனை அடைந்த மாணவரின் தந்தை பாலமுருகன், கலெக்டர் வீரராகவராவிடம் நேற்று புகார் மனு கொடுத்தார்.
மனுவில், ''அரசு வங்கி தொடர்ந்து கல்விக்கடன் வழங்கினால்தான் எனது மகன் படிப்பை முழுமையாக முடிக்க முடியும். வங்கி தொடர்ந்து கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive