NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி

          தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள்நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 
 
            ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.

புகார் எழவில்லை: ஆனால் இந்தாண்டு ஆக.,3ல் துவங்கிய கலந்தாய்வில் தற்போது வரை தொடக்க கல்வியில் 200 ஏ.இ.இ.ஓ.,க்கள் மாறுதல், 80க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் என 12 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் 499 பேருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வும், 325 பேருக்கு மாறுதலும் கிடைத்துள்ளன. ஆனால் பெரிய அளவிலான புகார்களோ, சர்ச்சையோ எழவில்லை. பின்னணி என்ன: இதற்கு காரணம் அரசியல்வாதி சிபாரிசு இல்லை; ஒரு காலி இடத்தை கூட அதிகாரிகள் மறைக்கவில்லை என்பது தான்.
மாறுதல் கலந்தாய்வு என்றாலே கல்வி அதிகாரிகளை விமர்சிக்கும் ஆசிரியர் சங்கங்கள் இந்தாண்டு அதிகாரிகளை புகழ்ந்து தள்ளுகின்றன.

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் பின்னணி குறித்து கல்வி உயர்
அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முக்கிய காரணம் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியை அதிகபலம் கொண்ட தி.மு.க.,வும் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் 'பேரம்' மற்றும் காலி இடங்கள் மறைப்பு என்றால் எதிர்கட்சியினர் பெரும் பிரச்னையாக்கி முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவர். இதனால் தான் அரசியல்வாதிகளும், கல்வி அதிகாரிகளும் தங்கள் 'கைகளை கட்டி' வைத்துக் கொண்டனர், என்றார்.

உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக தலைவர் சாமிசத்தியமூர்த்திகூறியதாவது: ஒரு காலியிடம் கூட மறைக்கப்படாமல் நேர்மையாகவும், வெளிப்
படையாகவும் நடத்தப்படுகிறது. ஒரு பைசா செலவில்லாமல் விரும்பிய இடங்கள் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் அமைச்சர் பெஞ்சமின், இயக்குனர் கண்ணப்பனுக்கு
நன்றியை தெரிவிக்கிறோம்," என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive