NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ராகிங்'கில் பாதிக்கப்பட்ட மாணவி சி.இ.ஓ., அலுவலகத்தில் போராட்டம்

           'ராகிங்' கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி, தந்தையுடன், கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
       கரூர் மாவட்டம், காதிதபுரம் டி.என்.பி.எல்., காலனியை சேர்ந்த பட்டாபி மகள் ஜனனி, 16. இவர், மண்மங்கலம் ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த மாதம், 6ம் தேதி விடுதியில் ஜனனியை, சக மாணவியர், 'ராகிங்' செய்துள்ளனர்.

பள்ளியில் விசாரணை : இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் ஜனனி புகார் தெரிவித்தார். கடந்த, 15ம் தேதி திண்டுக்கல் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மேரி, பள்ளியில் விசாரணை நடத்தினார். அப்போது, அந்த பள்ளியில் தொடர்ந்து, படிக்க இயலாத காரணத்தால், மாற்று சான்றிதழ் மற்றும் ஒரு
லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை திரும்ப தந்தால், டி.என்.பி.எல்., பள்ளியில் சேர்ந்து படிப்பதாக கூறியுள்ளார். ஆயினும், பள்ளி நிர்வாகம் மாற்று சான்றிதழ் மற்றும் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தது. பல முறை, முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, முதன்மை கல்வி அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவி ஜனனி மற்றும் அவரது தந்தை
பட்டாபி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுதிமொழி : இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, இரண்டு பள்ளி நிர்வாகங்களிடமும் தொடர்பு கொண்டு பேசினார். 'மாற்று சான்றிதழ் மற்றும் பணம் திரும்ப அளிக்கப்படும்; டி.என்.பி.எல்., பள்ளியில் மாணவி சேரலாம்' என்ற உறுதிமொழியை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive