NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமச்சீர் கல்வி தரம் உயரணும்!!!

          சமச்சீர் கல்வியில், ஆறு - பத்தாம் வகுப்பு வரையுள்ள, அறிவியல் மற்றும் கணிதம் பாடத்திட்டங்கள், தரம் உயர்த்தப்பட வேண்டும் என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது.

          தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு கூட்டம், அவிநாசி ரோடு, சேம்பர் டவர்ஸில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அமைப்பின் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார்.
இதில், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க, மூன்றாண்டுகள் கால நீட்டிப்பு அளித்தல்; அனைவருக்கும் கல்வி (ஆர்.டி.இ.) விதிப்படி, முழுமையான சேர்க்கை நடைபெற கட்டாயப்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
தேசிய அளவில், ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை வகுத்து, மொழி பாடத்தேர்வில் மாணவர்களுக்கு சுதந்திரத்தை அளித்தல்; சமச்சீர் முறையில், அறிவியல், கணிதம் பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தல்; பத்தாண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகளுக்கு, முழு அங்கீகாரம் வழங்குதல் உட்பட, எட்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு பொருளாளர் ரத்தினசபாபதி, செயலாளர் கனகசபை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive