தமிழகம்
முழுவதும், கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,
காலாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக, 14ம் தேதி,
சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அதனால்,
காலாண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கு,
செப்., 12ல் நடக்கவிருந்த ஆங்கிலம் இரண்டாம் தாள், செப்., 20க்கும், 14ம்
தேதி நடக்கவிருந்த வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள்,
22ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 15ல்
ஆங்கிலம் முதல் தாள்; 16ல் ஆங்கிலம் இரண்டாம் தாள்; 19ல் கணிதம்; 21ல்
அறிவியல்; 22ல் விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடத் தேர்வுகள், வழக்கமான தேதிகளில்
நடத்தப்படுகின்றன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...