NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலிசுக்கு உதவும் வாட்ஸ் அப் குழு !

*ரயில்* *கொள்ளையில்* *துப்பு* *துலக்க* '*வாட்ஸ்* - *ஆப்* *குரூப்*
ரயில் கொள்ளை வழக்கில், உடனுக்குடன் தகவல் பரிமாற, 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆக., 28ல், சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு,ஆறு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவான, சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக, ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் போலீசாரும்
துப்பு துலக்கி வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி.,மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், டி.எஸ். பி., இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர்கள் மிறக்கப்பட்டுள்ளனர்.அவர்கள்,சென்னை,
விருத்தாச்சலம்,சேலம், ஈரோடு மற்றும் வட மாநிலங்கள் என, பல்வேறு இடங் களில் முகா மிட்டுள்ளனர்.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களை, உடனுக் குடன் உயர் அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நீடித்து வந்தது. அதை எளிமைப்படுத்த, போலீஸ் அதிகாரிகள், 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ்அதிகாரி ஒருவர் கூறுகை யில், 'ரயில் கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசாரை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக, வாட்ஸ் - ஆப் குரூப் துவங்கி, விசாரணையை தீவிரப்படுத்த உள்ளோம்' என்றார்.
1,000 பக்க அறிக்கை! ரயில் கொள்ளை வழக்கில்,
இதுவரை நடந்த விசாரணை குறித்து, தனிப் படை போலீசார், நேற்று, 1,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் ஒப்படைத்துள்ள னர்.
அதன் அடிப்படையில் சேலம், ஈரோடு பகுதியில் கொள்ளையர்களை தேடும் பணி நடந்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive