NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தமடையில் தாளாளர்-ஆசிரியர்கள் மோதலால் மூடிக்கிடந்த பள்ளிக்கூடம்: தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்

        நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. 
 
         இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தின் தாளாளராக அழகர்சாமி இருந்து வருகிறார். பள்ளிக்கூடத்தில் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


கடந்த சில மாதங்களாக தாளாளருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. சாவியை வைத்துள்ள தாளாளர் தினமும் பள்ளிக்கூடத்தை திறந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கூடத்தை தாமதமாக திறப்பதால், ஆசிரியர்களும், மாணவர்களும் நீண்ட நேரம் வெளியே காத்திருந்து தாமதமாக பள்ளிக்கூடத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டதாம். தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் தேர்வு எழுத மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அப்போது பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை. வெளியே இருந்த அறிவிப்பு பலகையில் ‘இன்று விடுமுறை’ என எழுதப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தனர்.

தாளாளர் சாவியை தர மறுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக பெற்றோர்கள் சிலர் சேரன்மாதேவி உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வியிடம் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக உதவி கல்வி அதிகாரி கலைச்செல்வி பத்தமடை பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். பள்ளிக்கூடம் திறக்கப்படாமல், விடுமுறை என்ற அறிவிப்பு பலகை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பள்ளிக்கூட ஆசிரியர்களை அழைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். தாளாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், உடனடியாக பள்ளிக்கூடத்துக்கு வருமாறு உத்தரவிட்டார்.

அவர் பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அவரை கண்டித்த உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கூடத்தை திறக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர், பள்ளிக்கூட வளாகத்தில் தாளாளர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

சொந்த பிரச்சினைகளுக்காக பள்ளிக்கூடத்தை திறக்காமல் மாணவர்களின் படிப்பை பாதிக்கும் வகையில் செயல்படுவதை அவர் வன்மையாக கண்டித்தார். பின்னர், வீடுகளுக்குச் சென்ற மாணவ, மாணவியரை பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முன்னிலையில் மாணவ, மாணவியருக்கு தேர்வு நடைபெற்றது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive