தமிழகத்தில் இன்று முதல் நடக்கவிருந்த லாரி ஸ்டிரைக் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி அளித்த பேட்டி:
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, கடந்த 28 நாட்களுக்கு மேலாக கர்நாடகா வழியாக தமிழக லாரிகளை இயக்க முடியவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுடன் லாரிகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் தினமும் ரூ.1000 கோடிக்கு வர்த்தக இழப்பும் ஏற்பட்டு வருகிறது. தகுந்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்துக்குள் லாரிகளை இயக்க தமிழக அரசும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திபோக்குவரத்து துறை அமைச்சர், செயலாளரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்தோம். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், நாளை (இன்று) முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று தமிழக காவல்துறை டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசியபோது அவர்கள், ஒரு வார காலத்துக்குள் கர்நாடகா மாநிலத்துக்குள் தமிழக லாரிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அரசின் வேண்டுகோளை ஏற்று, நாளை(இன்று) தமிழகத்தில் நடைபெற இருந்த லாரி ஸ்டிரைக்கை ஒத்தி வைத்துள்ளோம். இதனால் மறு தேதி குறிப்பிடாமல் ஸ்டிரைக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, கடந்த 28 நாட்களுக்கு மேலாக கர்நாடகா வழியாக தமிழக லாரிகளை இயக்க முடியவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுடன் லாரிகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் தினமும் ரூ.1000 கோடிக்கு வர்த்தக இழப்பும் ஏற்பட்டு வருகிறது. தகுந்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்துக்குள் லாரிகளை இயக்க தமிழக அரசும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திபோக்குவரத்து துறை அமைச்சர், செயலாளரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்தோம். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், நாளை (இன்று) முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று தமிழக காவல்துறை டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசியபோது அவர்கள், ஒரு வார காலத்துக்குள் கர்நாடகா மாநிலத்துக்குள் தமிழக லாரிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அரசின் வேண்டுகோளை ஏற்று, நாளை(இன்று) தமிழகத்தில் நடைபெற இருந்த லாரி ஸ்டிரைக்கை ஒத்தி வைத்துள்ளோம். இதனால் மறு தேதி குறிப்பிடாமல் ஸ்டிரைக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...