NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய ’கலா உற்சவ்’ போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தேர்வு

      தேசிய கலா உற்சவ் போட்டியில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த மூன்று அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
 
     மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இடைநிலை கல்வி பயிலும் பள்ளி மாணவர்களிடம், கலைத் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில், கலா உற்சவ் நிகழ்ச்சிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது.
இதனை என்.சி.இ.ஆர்.டி., நெறிப்படுத்தி வருகிறது. தேசிய கலா உற்சவ் போட்டியில், புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்க, மண்டல, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. நடனம், இசை, நாடகம், காட்சிக்கலை, ஓவியம் போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். இதில், நடனம், நாடகம் பிரிவில் சேலியமேடு அரசு உயர்நிலைப் பள்ளி, இசை பிரிவில் காரைக்கால் நெடுங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, கலைப்பிரிவில் மாகி பந்தக்கால் ஐ.கே.கே.அரசு மேனிலைப் பள்ளி ஆகியவை, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆன்-லைன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், வரும் 20ம் தேதிக்குள் தங்களது கலை திட்ட அறிக்கையை யூ டியூப்ல் வீடியோவாக சமர்ப்பிக்க வேண்டும். தேசிய கலா உற்சவ் போட்டி, அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடை பெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம், இரண்டாம் பரிசாக 3 லட்சம், மூன்றாம் பரிசாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive