NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின் கடந்த, 3ம் தேதி துவங்கின.
 அப்போது மாணவ,மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. 

மேலும், அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டன. வழக்கமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அளவிலும், 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரே அளவிலான சுடிதார் மற்றும் பேன்ட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டுக்கான இரண்டு செட் சீருடைகள், முதல் பருவத்திலேயே வழங்கப்பட்டன. இரண்டாம் பருவம் துவங்கிய நிலையில், மூன்றாவது செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள் அனைத்தும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இவற்றை மாணவர்களால் அணிய முடியாது. அனைத்து சீருடையும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அளவிலேயே உள்ளது. இதே போல தான் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் காலணிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

பல்வேறு அளவுகளில் இவற்றை தயார் செய்து வினியோகம் செய்ய வேண்டும் அல்லது மாவட்டம் தோறும் சீருடை தைப்பதற்கான மையங்களை ஏற்படுத்தி மாணவ, மாணவியரின் அளவுக்கு ஏற்ப சீருடைகளை தைத்து வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive