அடுத்த ஆண்டின் (2017) தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலுக்காக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 10 -ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கல்வி நிறுவனங்கள் பதிவு செய்ய, செப்டம்பர் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர் கல்வி தரவரிசைத் திட்டம்' என்ற புதியத் திட்டத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி வரும் 10 -ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கல்வி நிறுவனங்கள் பதிவு செய்ய, செப்டம்பர் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர் கல்வி தரவரிசைத் திட்டம்' என்ற புதியத் திட்டத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...