தெலுங்கானா
மாநிலத்தில் நடந்த தென்னிந்திய குண்டு எறிதல் போட்டியில், பரமக்குடி கீழ
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா தங்கம் வென்று சாதனை
படைத்தார்.தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 28வது தென்னிந்திய அளவிலான தடகள
போட்டிகள் நடந்தது.
இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி சர்மிளா(14 வயதிற்குட்பட்டோர்) கலந்துகொண்டார். குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இவர் 11.23 மீ, துாரம் குண்டு எறிந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இவர் கோவையில் நவ., 14ல் நடக்கும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கிறார்.
இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி சர்மிளா(14 வயதிற்குட்பட்டோர்) கலந்துகொண்டார். குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இவர் 11.23 மீ, துாரம் குண்டு எறிந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இவர் கோவையில் நவ., 14ல் நடக்கும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...