NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?

          பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும். 
நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive