NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.50, ரூ.100 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

        புழக்கத்தில் உள்ள ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
 
       இதுதொடர்பாக கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் உலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த விளக்கத்தை அரசு வெளியிட்டுள்ளது.

கருப்புப் பணத்தைத் தடுக்கும் நோக்கில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கு நடுவே சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும், வதந்திகளும் நாள்தோறும் புதிது புதிதாக வரத் தொடங்கின.
ரூ.10 முதல் ரூ.100 வரை உள்ள அனைத்து நோட்டுகளும் ஜனவரி மாதத்துக்கு மேல் செல்லாது என்றும் இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் "வாட்ஸ்-அப்', முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) உள்ளிட்ட தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டதால் மக்களிடையே குழப்பம் நிலவியது.
இந்நிலையில், இதனை தெளிவுபடுத்தும் விதமாக பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன. அவற்றில் ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளையும் திரும்பப் பெறப் போவதாகக் கூறப்படும் கருத்து கவனிக்கத்தக்க ஒன்று.
அப்படி ஓர் அறிவிப்பை வெளியிடும் எண்ணமோ, திட்டமோ அரசுக்கு இல்லை. எனவே, இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அதேபோன்று ரூ.2,000 நோட்டு சாயம் போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த நோட்டின் பாதுகாப்பு அம்சங்களில் அதுவும் ஒன்று. துணியைக் கொண்டு ரூ.2,000 நோட்டை அழுத்தித் துடைத்தால் அதன் வண்ணம் சிறிதளவு துணியில் ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு சாயம் ஒட்டினால்தான் அது உண்மையான நோட்டு என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உராய்வை ஏற்படுத்தும்போது செயற்கை மின்னூட்டம் ஏற்பட்டு அதனால் சிறிய எதிர் விளைவு உருவாவது இயற்கை. இதற்கு டர்போ - எலெக்ட்ரிக் வினை மாற்றம் என்று பெயர்.
அதுபோலத்தான் ரூ.2,000 நோட்டுகளில் சாயம் போகும் விளைவையயும் கருத வேண்டும். எனவே, இதை எண்ணி மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive