NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும்

          அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
         பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். 
இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர். ஆனால், திருவள்ளூர், பூண்டி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருமழிசை உட்பட பல பகுதிகளில் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். எனவே, அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காதல் மயக்கம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், சினிமாவும், டிவியும் பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, காதல் வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாணவிகளுடன் சிலர் செல்கின்றனர். ‘’பிள்ளையை காணவில்லை’ என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive