NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு: இன்று கடைசி

          வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. 
 
         பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் வங்கி, ஏடிஎம் பண பரிவர்த்தனையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.

அதன்படி வங்கி சேமிப்புக் கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24,000, ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வரம்பு ரூ.2,000 என குறைக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஒரு வாரத்தில் இதுவரை ரூ.20,000 வரை எடுத்திருந்தால், புதன்கிழமையன்று (நவ.23) மீதித் தொகை ரூ.4,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கைப் பொருத்தவரை, அவர் ஏடிஎம் மையத்தில் எடுக்கும் பணத்தையும் கணக்கில் கொண்டே மீதித் தொகை மட்டுமே காசோலைக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வங்கிகளில் தொடரும் பண பற்றாக்குறை: வங்கிகளுக்கு போதிய பணத்தை ரிசர்வ் வங்கி தராமல் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையை (ரூ.24,000) அளிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இந்த வாரம் தொடங்கிய திங்கள்கிழமையன்று (நவ.21) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000-மும் செவ்வாய்க்கிழமையன்று (நவ.22) அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே வங்கிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive