NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நிறைவு நாளில் பி.எப்., பணம்

           மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடந்தது.
 
         இதற்கு, மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் கண்காணிப்பு வார விழா நடத்தப்படுகிறது.
துறை அதிகாரிகள் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் சேவை அளிப்பதில் ஏற்படும் தாமதமே ஊழலின் துவக்கம். எனவே, ஏழு நாட்களுக்குள் அவர்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை தீர்த்து வைப்பதில் மதுரை பி.எப்., மண்டல அலுவலகம், இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திற்கு வருவதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.இனி, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, அவர் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து, அவரது ஆவணங்கள் பெறப்படும். இதன் மூலம், அவர் பணி நிறைவு செய்யும் நாளில், பி.எப்., பணத்தை பெறும்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மண்டல உதவி கமிஷனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive