NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை முதல் ஏ.டி.எம்.,ல் ரூ.4,500 எடுக்கலாம்!

நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உச்சவரம்பு:
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; அப்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு, டிச., 30 வரையிலான, 50 நாட்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 2,500 ரூபாயும் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்திருந்த, 50 நாட்கள் கெடு நேற்றுடன்(டிச.,30) முடிவடைந்தது.



ரூ4,500 ஆக உயர்வு:
இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி (நாளை) முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2,500 ஆக இருந்த வரம்பு ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்று விதிக்கப்பட்ட வரம்பு தளர்த்தப்படவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive