NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரவு முழுவதும் காட்டில் தவித்த 7 மாணவ, மாணவியர் மீட்பு!!

        பள்ளியிலிருந்து மாயமான, ஏழு மாணவ, மாணவியர் இரவு முழுவதும், வனப்பகுதியில் தவித்தனர்; அவர்களை போலீசார் மீட்டனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அடுத்துள்ள பெள்ளத்திகம்பை பகுதியில், குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி குழந்தைகள், 5 கி.மீ., உள்ள அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற நான்கு மாணவியர், மூன்று மாணவர்கள், மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


இதனால், மஞ்சூர் போலீசில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதிரடிப்படை போலீசார், வேட்டை தடுப்பு காவலர்கள் என, ஏராளமானோர், இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கெத்தை அருகே, ஒக்கநாடு வனப்பகுதியில், நான்கு மாணவியரை நேற்று காலை, 8:30 மணிக்கு போலீசார் மீட்டனர். மதியம், 1:30 மணிக்கு மூன்று மாணவர்களையும் மீட்டனர். 
நடந்தது என்ன? : அரையாண்டு தேர்வில், மூன்று மாணவர்கள் காப்பி அடித்த போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை எச்சரித்துள்ளனர். மறு நாள் தேர்விலும் காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியர்கள், மீண்டும் எச்சரித்ததுடன், பெற்றோரை வரவழைத்து சொல்வதாக தெரிவித்துள்ளனர்.அச்சமடைந்த மூன்று மாணவர்கள், நேற்று முன் தினம் பள்ளி முடிந்த பின், சக மாணவியரிடம் கெத்தை வனப்பகுதிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளனர். இவர்களை தேடி, மாணவியரும் சென்றது தெரியவந்தது. 

யானைகள் வரவில்லை : மாணவர்கள் இரவு முழுவதும் தவித்த ஒக்கநாடு வனப்பகுதியில் தான், ஒரு வாரமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதே பகுதியில், இரவு முழுவதும் கடும் குளிரில் தவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அங்கு யானைகள் வரவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive