NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுகள் குறித்து 29-இல் வானொலியில் மோடி உரை

      வரும் 29-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகள் தொடர்பாக உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
வரும் 29-ஆம் தேதி "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் குறித்து பேச உள்ளேன்.
எனவே, மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களின் தேர்வு கால அனுபவங்கள் உள்ளிட்ட கருத்துகளை பதிவு செய்யக் கோருகிறேன். அவை, பிறருக்கு ஊக்கமளிப்பவையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வுக்குத் தயாராவது, தேர்வுக் காலங்களில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு உள்ளிட்டவை தொடர்பான கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு தொடர்பாக தங்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பகிர்ந்து கொள்ளலாம்.
இவை குறித்து பிரதமருக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள், "மனதின் குரல்' நிகழ்ச்சியின்போது ஒலிபரப்பப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive