NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமருக்கு சம்மன் - பிஏசி!!!

        பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரணைக்கு அழைப்போம் என்று பாராளுமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் கூறினார்.
 
              பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் குறித்து 22 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்ற பொது கணக்கு குழு ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி

இருக்கிறது.அவற்றில் முக்கிய கேள்விகளாக, பண மதிப்பு நீக்கம் குறித்த முடிவை எடுத்ததில் யார் யார், ஈடுபட்டனர்? தற்போது எவ்வளவு பணம் வங்கிக்கு வந்துள்ளது? தங்களது பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? கருப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் என்ன? என்று கேட்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக வருகிற 20–ந்தேதி பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இதுபற்றி பொது கணக்கு குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கே.வி. தாமஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்கும்படி கேட்டு கொண்டிருந்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஜனவரி 20–ந்தேதி கூட்டத்துக்கு சில நாட்கள் முன்பாகவே அவர்கள் பதில் அளிக்கவேண்டும். இந்த பதில்கள் பொது கணக்கு குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்’’ என்றார்.ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால், பொது கணக்கு குழு பிரதமரை அழைத்து விசாரிக்குமா? என்ற கேள்விக்கு தாமஸ் பதில் அளிக்கையில், ‘‘இப்பிரச்சினையில் தொடர்புடைய அத்தனை பேரையும் அழைத்து விசாரிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதேநேரம் 20–ந்தேதி கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் வெளியாகின்றன என்பதை பொறுத்தே இதுபற்றி தீர்மானிக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக இக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் பிரதமர் மோடி மற்றும் நிதிமந்திரி அருண்ஜெட்லி இருவரையும் அழைத்து விசாரிப்போம்’’ என்றார். 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது நிலைமை அப்படி தெரியவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்த அதிகாரிகளை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்கு குழு முடிவு செய்தது’’ என்று அவர் குறிப்பிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive