NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அபராதமின்றி மின் கட்டணம் : அவகாசம் தருமா வாரியம்?

     தொடர் விடுமுறையால், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம், கூடுதல் அவகாசம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது. 
 
       வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் எம்.ஜி.ஆர்., 100வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜன., 14ல் இருந்து, நேற்று வரை, அரசு விடுமுறை. பொங்கலை கொண்டாட, பலர் சொந்த ஊர் சென்றதால், மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, விடுமுறை தினங்களில், அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த, வாரியம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, நுகர்வோர் கோரியுள்ளனர்.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு மாதங்களுக்கு பின், ரயிலில் பயணம் செய்ய, முன்பதிவு என்ற பெயரில், மக்களிடம் இருந்து, ரயில்வே துறை, முன் கூட்டியே கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், மின் வாரியம், இரு மாதங்களுக்கு மின்சாரத்தை வழங்கிய பின், அதற்கான கட்டணத்தை வசூலிக்கிறது. அப்படி இருந்தும், தொடர் விடுமுறை வரும் போது, பலர் கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். தற்போது, அவகாசம் வழங்குவது குறித்து, உயரதிகாரிகள், மின் துறை அமைச்சர் ஆகியோரிடம் ஆலோசித்த பின், முடிவு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive