NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ‘தேர்வு மைய வளாகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது’ தேர்வு பணி அலுவலர்களுக்கு, இயக்குனர் உத்தரவு

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும்
தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.
68 பக்கங்கள் கொண்ட இந்த முக்கிய விதிமுறை கையேட்டில் இடம்பெற்று உள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-
செல்போன் பயன்படுத்த கூடாது
* ‘வார்தா’ புயல் காரணமாக தேர்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகளின் கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
* பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
* கேள்வித்தாள் அறையில் ஜன்னல்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதனை சிமெண்ட், கம்பி மூலம் அடைக்கவேண்டும்.
* தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் செல்போன் உள்பட எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த கூடாது. செல்போன் இருந்தால் அதை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். இதனை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணியமாக நடத்த வேண்டும்
* வினாத்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்லவேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்று வழித்தடத்தில் செல்லக்கூடாது.
* தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்கள் முன்னர், சம்பந்தப்பட்ட தேர்வு மைய அலுவலர்கள் தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
* தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்த தகவல்களை செய்தியாளர்களுக்கு பறக்கும் படை அதிகாரிகள் தெரிவிக்க கூடாது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
* தேர்வு அறையில் மாணவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
மனநிலை பாதிக்காத வகையில்...
* மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட கூடாது.
* மாணவர்களின் மனநிலை பாதிக்காத வகையில் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
* சந்தேகப்படும் மாணவர்களை மட்டுமே சோதனை செய்யவேண்டும். அனைத்து மாணவர்களையும் சோதனை செய்யக்கூடாது.
* மாணவிகளை ஆசிரியைகள் மட்டுமே சோதனையிட வேண்டும்.
* விடைத்தாளில் எல்லா விடைகளையும் மாணவர்கள் அடித்திருந்தால் அந்த தேர்வில் இருந்து நீக்கம் செய்வதுடன், அடுத்த 2 பருவ தேர்வுகள் எழுதவும் தடை விதிக்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் அந்த உத்தரவில் இடம்பெற்று உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive