NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.10,000 ரொக்கமாக சம்பளம் : வரிச்சலுகை இல்லை!

     தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ரூ.10,000க்கு மேல் ரொக்கமாக சம்பளம் வழங்கினால் வரிச்சலுகை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சிறு நிறுவனங்களாக இருந்தாலும்
வங்கிகள் மூலமாகவே சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில்,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, டிஜிட்டல் முறையில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை என்ற திட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக, நிறுவனங்களின் உதவியாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 என்ற அளவில் இருக்கிறது. இவர்களுக்கு சம்பளம் ரொக்கமாகத்தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பணமற்ற பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால், இனி ரூ.10,000க்கு மேல் காசோலையாகவோ அல்லது வங்கிக் கணக்குகள் மூலமாகவோ சம்பளம் அளித்தால் மட்டுமே வரிச்சலுகையை பெற முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பையடுத்து தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளத்தை டிஜிட்டல் முறையில் தருவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சம்பளத்தை பணமாக வழங்கும் சட்டத்தில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்ப திருத்தம் கொண்டு வரப்படுப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதனால் தனிநபருக்கு எவ்வித வரிச்சலுகையும் கிடைக்காது. இது நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive