NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மனநல மருத்துவமனைகள் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்தவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கையில் சீரான தேசியக் கொள்கையை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘உத்தரப்பிரதேச மாநில மனநல மருத்துவமனைகளில் மட்டும் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 300க்கும் மேற்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமல் உள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, ஜம்மு-காஷ்மீர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மனநல மருத்துவமனைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் உள்ளனர். ஆனால் சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்த பெரும்பாலானவர்களை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்யாமல் மருத்துவமனையிலேயே வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுமீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கையில் நாடு முழுவதும் ஒரேவிதமான தேசியக் கொள்கையை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என அறிவுறுத்தினர். மேலும் இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive