NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் வாரிய நேர்காணல்: கேமராவில் பதிவு

     முறைகேட்டை தடுக்க, உதவி பொறியாளர் நேர்காணலில், கண்காணிப்பு கேமரா பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 
    தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், மெக்கானிகல், சிவில் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை நியமிக்க
உள்ளது.
இதற்கான, எழுத்து தேர்வு நடந்து, ஓராண்டு முடிந்து விட்டது. விரைவில் நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுத்தோர், வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், நேர்காணல் விபரங்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய பணி பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் நியமனத்தை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். ஆனால், தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், சமீபத்தில், வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நேர்காணலை நியாயமாக நடத்தினாலும், வழக்கு தொடர வாய்ப்புள்ளது. அதனால், பணிகள் மேலும் தாமதாகும்.
எனவே, மின்வாரிய பொறியாளர்கள், இன்ஜினியரிங்
கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், நேர்காணல் நேர்மையாக நடத்தப்படும். நேர்காணலின் போது நடக்கும் அனைத்தும், கேமராவில் பதிவு செய்யப்படும். யாரேனும், வழக்கு தொடர்ந்தால், அந்த விபரம், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, மின் வாரியம், உதவி பொறியாளர் தேர்வு தொடர்பான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, சமீபத்தில் வெளியிட்டது. - நமது நிருபர் -
நேர்காணல் தேதியை இன்னும்
அறிவிக்கவில்லை. அதை,
விரைவில் நடத்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive