NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: முந்தின தனியார் பள்ளிகள்

        பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் முன்னரே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு உள்ளது.        பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், கடந்த வாரம் முடிந்தது; மே, 19ல் முடிவுகள் வெளியாகின்றன. எந்த பாடப் பிரிவுக்கு, எவ்வளவு மதிப்பெண் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடும்.
அதன்பின், மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பிளஸ் 1 மாணவர்களை சேர்க்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில், தனியார் பள்ளிகளில், அதற்குள் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இரு வாரங்களுக்கு முன், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. பல பள்ளிகள், கணிசமாக நன்கொடை பெற்று, பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்த்துள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என, அந்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இதில், வசதி படைத்தவர்கள், பள்ளிகள் கேட்ட நன்கொடையை வழங்கி, பாடப்பிரிவுகளையும், 'புக்' செய்துவிட்டனர். பல பள்ளிகள், இணையதளத்தில் வெளிப்படையாகவே, 'அட்மிஷன்' நடத்திய நிலையில், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதனால், 'மெரிட்' அடிப்படையில், பிளஸ் 1 சேரலாம் என எதிர்பார்த்திருக்கும் ஏழை மாணவர்களுக்கு, இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive