NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., மேல்நிலை வகுப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு!

தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதில், அதிக ஆர்வம் காட்டுவதால், சி.பி.எஸ்.இ., மேல்நிலை வகுப்புகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வி துவங்கும் வரை, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகள், அரிதாகவே இருந்தன. 

2011ல், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், ஸ்டேட்போர்டு ஆகிய பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தனியார் பள்ளிகளின் தனித்துவம் குறைந்துவிடும் என்பதால், மெட்ரிக் பள்ளி நடத்தி வந்த நிர்வாகத்தினர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்கினர். 

இன்று, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை இருப்பினும், அவற்றில் எட்டாம் வகுப்பு வரை மட்டும், மாணவர் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை, கற்பித்தலில் அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மூலம், பெரும்பாலான பள்ளிகள் செயல்படுவதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் செய்வதில் சிக்கல்கள் இருந்தன. 

இதனால், ரேங்கிங் வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்டவை, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்படுவதால், அதில் கட் ஆப் பெற, ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தையே மாணவர்களும், பெற்றோரும் தேர்வுசெய்தனர். 

இதனால், எட்டாம் வகுப்பு வரை மட்டும், சி.பி.எஸ்.இ., கல்வியை தரும் பலரும், ஒன்பதாம் வகுப்பில் சமச்சீர் கல்விக்கு மாறுவது வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அரிதாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழகத்திலும் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதேபோல், மத்திய அரசு, அடுத்த ஆண்டு பொறியியல் கல்விக்கும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதனால், தேசிய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு, பெற்றோர் இடையே அதிகரித்து வருகிறது. பொதுவாக, நீட், ஐ.ஐ.டி., உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. 

இதற்கான மையங்கள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட புத்தகங்களை வைத்தே பயிற்சியளிக்கின்றன. இதனால், தங்கள் குழந்தைகளை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கிராக்கி உருவாகியுள்ளது.

எட்டாம் வகுப்புடன், சமச்சீர் கல்விக்கு தாவும் மாணவர்களும், நடப்பு கல்வியாண்டில் தொடர்ந்து சி.பி.எஸ்.இ., படிக்கவே விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய தேர்வுகளுக்கு அனுமதியும், அங்கீகாரமும் பெறாத பள்ளிகள், தற்போது அவசர அவசரமாக விண்ணப்பிக்கின்றன.

சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஒருவர் கூறியதாவது

சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் ரேங்கிங் பெற முடிவதில்லை. இதனால், அதற்கு தயார்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தோம். 

தற்போது ரேங்கிங் வராவிட்டாலும், தேசிய நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற எளிதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பெற்றோர் தேர்வு செய்கின்றனர்.

இனி வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதனால், எட்டாம் வகுப்பு வரை மட்டும் நடத்தி வந்த பல பள்ளிகள், மேல்நிலைக்கல்வி வரை நடத்த, நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

ஸ்டேட் போர்டு பாடத்திட்டமும், இதற்கேற்ப மாற்றியமைக்காவிட்டால், அதில் படிக்கும் மாணவர்கள், தேசிய நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராவதில் சிக்கல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.




1 Comments:

  1. All in All, Digital
    Digital India & Digital Tamil Nadu in this Government role
    1.Digital Classroom and Digital Educations
    2.Digital Attendance and Digital Exam
    3. Digital Library and Online Exam
    4. Digital Learning and Digital Study Books
    5. Digital Transection and Digital Money
    6. Free Laptop and online Coaching
    7. Online Business
    8. Online Library
    9. etc.…etc. Digital, Digital, Digital … Online, Online, Online. But …
    But…………………. No Need Computer Education in School
    Why? Why?
    No Lear Computer Subject in School Level Educations system
    Digital India,
    Digital Tamilnadu, Digital Election, Digital Banking systems, Digital News, Digital Media, ….
    Etc,,etc…etc…………………………. All in All, Digital methods follow Govt
    What? Why? Lear Beginning for school level teaching accept in computer science subject why? Think

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive