NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு - Court News

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்கில்,
8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, உள்ளிட்ட துறைகளில் பனியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மற்ற துறைகளில் இது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive