NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : ரூ.50 வசூலிப்பதாக புகார்

      ரேஷன் ஊழியர்கள், 'ஸ்மார்ட்' கார்டு தருவதற்கு, மக்களிடம், 50 ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு, பழைய காகித கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கி வருகிறது; இதற்கு, கட்டணம் கிடையாது. ஆனால், கடை ஊழியர்கள், பணம் தருவோருக்கு மட்டுமே, ஸ்மார்ட் கார்டு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது: ரேஷன் கார்டு தயாராக உள்ளதாக, மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., வருகிறது. கடைக்கு எடுத்துச் சென்று காட்டினால், அங்குள்ள ஊழியர்கள், 50 ரூபாய் கேட்கின்றனர்; கொடுத்தால் தான், கார்டு தருகின்றனர். பணம் தர மறுத்தால், கார்டை தேடுவது போல் செய்து விட்டு, 'இன்னும் உங்கள் கார்டு, கடைக்கு வரவில்லை; நாளை வாருங்கள்' என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் முறைகேட்டை தடுக்கவே, ஸ்மார்ட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு, யாரும் பணம் தர வேண்டாம். ஊழியர்கள், பணம் வசூலிப்பதைத் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணம் கேட்பது குறித்து புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive