NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகையை 'காணோம்'

சிவகங்கை: பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கியர் போன்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.


இதற்கு மாணவர்களின் பெற்றோர் (அ) பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் 50 சசதவீத மதிப்பெண்கள் பெற்றுஇருக்க வேண்டும்.சென்ற ஆண்டு பிற்பட்டோர், சிறுபான்மை யினர் நலத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பள்ளி முடிந்தும் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் உதவித்தொகைக்காக மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பள்ளி முடிவதற்குள் அந்த ஆண்டிற்குரிய உதவித்தொகை வந்துவிடும். கடந்த கல்வியாண்டிற்கு இதுவரை வரவில்லை. இதனால் மாணவர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர்,' என்றார்.பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களிடமும் வங்கி சேமிப்பு கணக்கு பெறப்பட்டுள்ளது. நிதி வரப்பெற்றதும் மாணவர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive