NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு அமைப்பாளர் நியமனம் - மிரட்சியில் மாவட்ட அதிகாரிகள் : ஆளுங்கட்சியினர் நெருக்கடி

சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியினர் தரும் நெருக்கடியால் அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர். தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. மாவட்ட வாரியாக சத்துணவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில், ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகம் உள்ளதாக அதிகாரிகள் புலம்புகின்றனர். இதனால், விண்ணப்பங்கள் பெறப்பட்டும், நேர்முகத் தேர்வு மற்றும் பணி நியமனம் செய்ய முடியாமல் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். தகுதியற்ற விண்ணப்பதாரர்களை ஆளுங்கட்சியினர் நெருக்கடியால் பணி நியமனம் செய்தால், பின் வரும் நாட்களில் நீதிமன்ற வழக்குகளில் சிக்க நேரிடும், என்பதால் செய்வதறியாது திகைக்கின்றனர். அதே நேரம் விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, பெரம்பலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் கலெக்டர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு, சரியான விண்ணப்பதாரர்களை விரைவாக தேர்வு செய்து பணி நியமனத்தை நிறைவு செய்துள்ளனர்.ஆனால், மற்ற மாவட்டங்களில் இழுபறி நீடிக்கிறது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. ஆளுங்கட்சியினர் தந்த பட்டியலில் உள்ளவர்களை அழைத்தால், பிரச்னை வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 80 சதவீதம் பேராவது உண்மையில் தகுதியான ஏழ்மை நிலையில் உள்ளவராக இருந்தால் பரவாயில்லை. வசதியான ஒருவருக்கு இந்த வேலையை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. வசதியானவர்களால் கட்சியினர் கேட்கும் தொகையை கொடுக்க முடிவதில்லை. இதனால், அவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது, என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive