NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BreaBreaking News: மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது - சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு.

💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive