NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,111 BT Appointment via TET Exam - June 8 Certificate Verification

TRB : 1,111 B.T ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.




6 Comments:

  1. Ithu enna list onumey puriyala. En avangalum kulambi nammalayum kulapuraanga.

    ReplyDelete
    Replies
    1. 1111 போஷ்ட்டுணு சொல்றாங்க ஆன வெறும் 390தானே இருக்கு மீதி எங்கே? அரசியல? ௐ பகவனே

      Delete
    2. 1111 போஷ்ட்டுணு சொல்றாங்க ஆன வெறும் 390தானே இருக்கு மீதி எங்கே? அரசியல? ௐ பகவனே

      Delete
  2. TET 2012-2013 & 2014(SPL BED)ல் தோ்ச்சி பெற்றவா்களை கொண்டு 1111 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது மொத்தம் 396 பணி நாடுநா்களின் பட்டியல் மட்டுமே சான்றிதழ் சாிபாா்பிற்கு வெளியிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணியிடங்களுக்கு எப்போது பட்டியல் வெளியிடப்படும் என்ற தவகல் வேண்டும். மேலும் 2012-2013 TET ல் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணியிடம் வழங்கப்பட்ட பிறகே தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட 2017 TET ல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்காமல் எவ்வாறு தற்போது தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்க இயலும் வெயிட்டேஜ் என்ற முறையை இரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் 2012-2013 ல் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கி விட்டு பிறகு புதிதாக தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்க வேண்டும் என மாண்புமிகு கல்வித்துறை அமைச்சா் அவா்களையும் திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவா்களையும் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  3. வெயிட்டேஜ் முறையால் பலா் பாதிக்கப்பட்டு பணி கிடைக்காமல் உள்ளனா் இப்பொழு மதிப்பெண்கள் தாரளமாக வழங்கப்படுவதால் இளைய தலைமுறையினா் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்று பணி பெற்றுவிடுகின்றனா். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பெண்கள் அவ்வளவு தாரளமாக வழங்க வில்லை எனவே பல வயது முதிா்ந்தோா் TET தோ்வில் தோ்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் இன்றளவும் பணி கிடைக்காமல் உள்ளாா்கள் எனவே இவா்களின் வாழ்க்கைக்கு விளக்கேற்ற வேண்டும் என மாண்புமிகு கல்வித்துறை அமைச்சா் அவா்களையும் கல்வித்துறை செயலா் மதிப்புமிகு. திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவா்களையும் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive