NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Bank Number Portablity Must for Bank's too much service tax issue!

     ‘‘ஒரு­சில வங்­கி­கள், வாடிக்­கை­யா­ளர்­களை விரட்­டவே, சேவை கட்­ட­ணங்­களை உயர்த்­து­கின்றன,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், எஸ்.எஸ்.முந்த்ரா காட்­ட­மாக தெரி­வித்து உள்­ளார்.


அவர், மும்­பை­யில், பி.சி.எஸ்.பி.ஐ., எனப்­படும், இந்­திய வங்கி நடை­மு­றை­கள் மற்­றும் தர நிர்­ணய வாரி­யத்­தின் கூட்­டத்­தில், மேலும் பேசி­ய­தா­வது: வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான வங்­கிச் சேவை­கள் கிடைக்­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் அதி­கா­ரம் மட்­டுமே, ரிசர்வ் வங்­கிக்கு உள்­ளது. மற்­ற­படி, வங்­கி­கள் பல்­வேறு சேவை­க­ளுக்­காக, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் வசூ­லிக்­கும் கட்­ட­ணத்தை கட்­டுப்­ப­டுத்­தும் அதி­கா­ரம், ரிசர்வ் வங்­கிக்கு கிடை­யாது.

தப்பிக்க வேண்டாம்: வாடிக்­கை­யா­ளர் கணக்­கில், குறைந்­த­பட்ச சரா­சரி இருப்பை நிர்­ண­யிக்­கும் அதி­கா­ரம் வங்­கி­க­ளுக்கு உள்­ளது. அது போல, பல்­வேறு சேவை­க­ளுக்­கான கட்­ட­ணத்­தை­யும், அவை நிர்­ண­யித்­துக் கொள்­ள­லாம். வங்­கி­கள், குறிப்­பிட்ட பிரீ­மி­யம் சேவை­க­ளுக்கு கட்­ட­ணம் வசூ­லிப்­ப­தில், ரிசர்வ் வங்­கிக்கு எந்த ஆட்­சே­ப­னை­யும் இல்லை. ஆனால், வங்­கி­கள், அடிப்­படை கட்­ட­ணங்­களை கூட, நியா­ய­மற்ற வகை­யில் மிக அதி­க­மாக நிர்­ண­யித்து, வாடிக்­கை­யா­ளர்­களை வெளி­யேற்­றக் கூடாது.

அதே சம­யம், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவையை மறுக்­கவோ அல்­லது அவர்­கள் வங்­கியை விட்டு வெளி­யே­று­வ­தற்கோ, இக்­கட்­ட­ணங்­கள் தான் கார­ணம் எனக்­கூறி, வங்­கி­கள் தப்­பித்­துக் கொள்­ளக் கூடாது. ஒரு­சில வங்­கி­கள், இது போன்ற செயல்­களில் ஈடு­பட்டு வரு­வதை, ரிசர்வ் வங்கி கவ­னித்து வரு­கிறது. வங்­கித் துறை, இத்­த­கைய பாதை­யில் தான் செல்­லத் துவங்­கி­யுள்­ளது. இதற்­கெல்­லாம் ஒரே தீர்வு, ‘வங்­கிக் கணக்கு எண் போர்ட்­ட­பி­ளிட்டி’ தான். இது நடை­மு­றைக்கு வந்­தால், அதிக கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர், சொல்­லா­மல் கொள்­ளா­மல், மிக சுல­ப­மாக, குறைந்த கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கிக்கு, தானே மாறி விடு­வார்.

விதிமீறல்: ஒரு நிறு­வ­னத்­தின் மொபைல் போன் எண்ணை மாற்­றா­மல், வேறு நிறு­வ­னத்­தின் சேவையை பெறும் வசதி போல, வங்­கித் துறை­யி­லும் வர வேண்­டும். நாட்­டின் பெரும்­பான்­மை­யான மக்­க­ளி­டம், தற்­போது, ‘ஆதார்’ அடை­யாள அட்டை உள்­ளது. அது போல, இணை­யம், மொபைல் போன் வாயி­லான பணப் பரி­வர்த்­த­னை­களும் அதி­க­ரித்­துள்ளன. அத­னால், ‘வங்­கிக் கணக்கு எண் போர்ட்­ட­பி­ளிட்டி’ வச­தியை சுல­ப­மாக அமல்­ப­டுத்த முடி­யும்.

பெரும்­பான்­மை­யான வங்­கி­கள், பி.சி.எஸ்.பி.ஐ., விதி­களை கடை­பி­டிப்­ப­தில்லை. இது தொடர்­பான புகார்­கள், கடந்த ஆறு ஆண்­டு­களில் மிக­வும் அதி­க­ரித்­துள்ளன. வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வங்­கி­கள் வழங்­கும் கணக்கு புத்­த­கம் தொடர்­பான விதி­மு­றை­களை, ரிசர்வ் வங்கி விரை­வில் வெளி­யிட உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘வங்கி கணக்கு எண் போர்ட்டபிளிட்டி’ அதிக கட்­ட­ணம் வசூ­லிக்­கும் பிரச்­னை­க­ளுக்கு ஒரே தீர்வு, ‘வங்­கிக் கணக்கு எண் போர்ட்­ட­பி­ளிட்டி’ தான். இது நடை­மு­றைக்கு வந்­தால், அதிக கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர், சொல்­லா­மல் கொள்­ளா­மல், மிக சுல­ப­மாக, குறைந்த கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கிக்கு, தானே மாறி விடு­வார். -எஸ்.எஸ்.முந்த்ரா. துணை கவர்­னர், ரிசர்வ் வங்கி





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive