NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை

        TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு,
அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  
இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு கட்டாயப்படுத்தாது.பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.










5 Comments:

  1. Atleast in this minority language teachers will be considered?

    ReplyDelete
  2. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் முதுநிலை ஆசிரியர் முறையே பின்பற்ற வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துயுள்ளனர்.வெயிட்டேஜ் முறையில் அனைவரும் சமமான போட்டி கிடையாது.
    உதாரணம்
    10 ஆண்டு முன் இருந்த கல்வி மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளுவது சரிகிடையாது.

    ReplyDelete
  3. மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள்....2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 61.38% வெயிட்டேஜ் பெற்று அரசு பணி கிடைக்காமல் தமிழ் படித்து பயனற்று.....38வயதில் மிகுந்த கவலையுடன்....தாங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வித்துறையில் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் பணி வழங்கி வாழ்வு கொடுங்கள்.....மிகுந்த எதிர்பார்ப்புடன்....

    ReplyDelete
  4. மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள்....2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 61.38% வெயிட்டேஜ் பெற்று அரசு பணி கிடைக்காமல் தமிழ் படித்து பயனற்று.....38வயதில் மிகுந்த கவலையுடன்....தாங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வித்துறையில் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் பணி வழங்கி வாழ்வு கொடுங்கள்.....மிகுந்த எதிர்பார்ப்புடன்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive