NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர்.
இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன.
பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.
இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.




6 Comments:

  1. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
      பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

      அனைவரும் வாரீர்!

      நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
      நேரம்: காலை 10:30
      இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
      திருச்சி
      ⚫ போராட்டத்திற்கு வரும் ஆணாசிரியர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிந்து வரவும்.
      🔴 கண்டிப்பாக TET சான்றிதழ் நகலை எடுத்து வரவும்.
      🔵 போராட்ட களத்திற்கு வருபவர்கள், போராட்ட களத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த படிவத்தை பெற்று, அதனை தெளிவாக நிரப்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
      ⚫ போராட்டத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் 08:08:2017 அன்று காலை 9.00 மணிக்குள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
      🔴 திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தபின் , பேருந்து நிலையத்தின் கடைசி நடைமேடைக்கு வரவும். சரியாக 9.20 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை சரியாக 10.00 மணியளவில் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை அடைவோம்.
      🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்.
      நன்றி
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
      பெற்றோர் கூட்டமபை்பு.
      மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
      வடிவேல் சுந்தர் 8012776142.
      இளங்கோவன் 8778229465

      Delete
  2. PERMANENT VACANCIES

    Govt Aided College
    vacancies

    (SET or NET or PhD pass only)

    History- 3 (GT, SCwomen , Mbc)

    Zoology-1(OC women)

    Commerce-2(GT and BCM)
    Botany-1 (GT)
    English -3( GT )
    History-3(GT)
    Maths-2( GT)



    Amount payable candidates only send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

    ReplyDelete
  3. வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  4. intha poarattam vetri perum....

    ReplyDelete
  5. TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive