NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்த 5 ஆண்டுகளில்... 7.50 லட்சம் பேர் பணிகளுக்கு ஆபத்து!!

நாட்­டில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும், மனி­தன் உத­வி­யின்றி, தன்­னிச்­சை­யாக பணி­களை மேற்­கொள்­ளும், ‘ரோபோ சாப்ட்­வேர்’களின் ஆதிக்­கம் கார­ண­மாக,
குறைந்த திறன் தேவைப்­படும் பிரி­வு­களில், 7.50 லட்­சம் பேர் வேலை­யி­ழக்­கும் அபா­யம் உள்­ளது’ என, ஆய்­வ­றிக்கை ஒன்­றில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.


எச்.எப்.எஸ்., ரிசர்ச் நிறு­வ­னம்,இந்­திய, ஐ.டி., மற்­றும் பி.பி.ஓ., துறை­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்­பத்­தின் தாக்­கம் குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தி­யா­வில், தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் வெளி­யார் மூலம் வேலையை முடித்­துக்கொள்­ளும், பி.பி.ஓ., சேவை துறை­களில், பல நிறு­வ­னங்­கள், ‘ஆட்­டோ­மே­ஷன், ஆர்­டி­பி­ஷி­யல் இன்­டெ­லி­ஜன்ஸ், மிஷின் லேர்­னிங்’ போன்ற புதிய தொழில்­நுட்­பங்­களை புகுத்த, ஆர்­வம் காட்டி வரு­கின்றன.
மனி­தன் தய­வின்றி, பணி­களை முடிக்­கக் கூடிய இந்த தொழில்­நுட்­பங்­களை, தக­வல்­களை உள்­ளீடு செய்­யும் சாதா­ரண பணி முதல், நடுத்­த­ர­மான மற்­றும் சிந்­தித்து முடி­வெ­டுக்க வேண்­டிய, அதிக திறன் தேவைப்­படும் பணி­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­த­லாம். இத­னால், இத்­த­கைய பணி­களில் உள்­ளோர், தன்­னிச்­சை­யாக செயல்­படும், ‘ரோபோ சாப்ட்­வேர்’களின் சவாலை, அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எதிர்­கொள்ள நேரி­டும்.

‘மனி­தர்­களின் வேலையை பறிக்க, ‘ரோபோ’க்கள் வரு­கின்றன’ என, எச்­ச­ரித்து வந்த காலம் எல்­லாம் போய் விட்­டது;அவை, தற்­போது நடை­மு­றைக்கு வந்து விட்­டன; அடுத்த ஐந்து ஆண்­டு­களில், சேவை துறை­யில், அவை எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை பார்க்க வேண்­டும். அதன்­படி, இந்­தியா மற்­றும் அமெ­ரிக்­கா­வில், தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் பி.பி.ஓ., சேவை துறை­க­ளைச் சேர்ந்த மொத்த பணி­யா­ளர்­களில், 2022க்குள், 10 சத­வீ­தம் பேர் வேலை­யி­ழக்க நேரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

இந்­தி­யா­வில் மட்­டும், குறைந்த திறன் தேவைப்­படும் பிரி­வு­களில், 7.50 லட்­சம் பேர் வேலை­யி­ழப்­பர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எந்த அள­விற்கு, நிறு­வ­னங்­கள், தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்து செயல்­ப­டுத்­தும், ‘ரோபோ சாப்ட்­வேர்’ தொழில்­நுட்­பங்­களை புகுத்­து­கின்­ற­னவோ, அந்த அள­விற்கு, மனி­தர்­களின் பணி வாய்ப்பு குறை­யும்.அதே சம­யம், இந்த புதிய தொழில்­நுட்­பங்­க­ளால், 2022ல், நடுத்­தர மற்­றும் அதிக திற­னுள்ள, 3 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­ப­தை­யும் மறுப்­ப­தற்கு இல்லை. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

அச்சம் வேண்டாம்:
இந்­திய பொரு­ளா­தா­ரம் வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­வ­தால், புதிய வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். அத­னால், ‘ஆட்­டோ­மே­ஷன்’ கார­ண­மாக, வேலை­வாய்ப்பு பறி­போ­கும் என, அச்­சம் கொள்ள தேவை­யில்லை.
-அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய இணையமைச்சர்

ஆதிக்கம் செலுத்தும்:
இந்­தி­யா­வில், 69 சத­வீத பணி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், தன்­னிச்­சை­யாக பணி­களை செய்து முடிக்­கும் சாப்ட்­வேர் தொழில்­நுட்­பத்­தின் ஆதிக்­கம், பர­வ­லாக வாய்ப்­புள்­ளது.
-உலக வங்கியின், ‘டிஜிட்டல் டிவிடெண்ட்ஸ்’ ஆய்வறிக்கை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive